எல்லாமே முடிந்த பிறகு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய போட்டியாளர்கள்.. கடைசியில் கூறிய அந்த வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 104 ஆவது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த சீசனில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் மூன்று போட்டியாளர்களும் தங்களுடைய ரசிகர்களுக்கு நன்றியை கூறி தங்களுக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே நேற்றோடு வாக்கு செலுத்துதல் முடிவடைந்து இருக்கும் நிலையில் இன்று இவர்கள் தங்களுக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

கடைசியில் மூன்று போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் இறுதி கட்டத்தில் விக்ரமன், அசீம், ஷிவின் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே நுழைந்து இருக்கின்றனர். இவர்களில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்தே கணிக்க முடியாத கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. கடைசி நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற மாதிரி ஏதாவது மாற்றம் நடைபெறுமா? அல்லது இந்த சீசனில் விக்ரமன் அல்லது அசீமின் வெற்றிதான் உறுதி செய்யப்படுமா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
இந்த நிலையில் இன்றைய முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வழக்கமாக சனிக்கிழமை எபிசோடு என்றால் கமல்ஹாசனின் என்ட்ரி தான் முதல் பிரமோவில் வெளியாகும். அதுவும் மதியம் தான் எப்போதும் பிரமோ வெளியாகும் ஆனால் இன்று காலையில் பிரமோ வெளியாகி இருக்கிறது. அந்த நேரத்தில் உள்ளே இருக்கும் மூன்று போட்டியாளர்களும் தங்களுக்கு இதுவரைக்கும் வாக்கு செலுத்தி ஆதரவு தந்து இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றிகளை கூறியிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்கு ரசிகர்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

க்ளோஸ் பண்ணியாச்சே
ஆனால் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வாக்கு செலுத்துதல் முறை ஒவ்வொரு வாரமும் இருந்து வரும் அந்த வகையில் நேற்றோடு இந்த வாரத்தின் இறுதி வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் ப்ரோமோவில் இவர்கள் வாக்கு கேட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக பேசி இருக்கின்றனர். இதைப் பார்த்து சிலர் கலாய்த்து கொண்டிருந்தாலும் தங்களுடைய வாக்கு ஏற்கனவே செலுத்தி விட்டோம் என்று சிலர் பதில்களை கூறி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இந்த சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன்தான் ஏற்கனவே நேற்று வாக்குகளின் அடிப்படையில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார் என்று கருத்து கூற, இல்லை அசீம் தான் டைட்டில் வின்னர் என்று அவருடைய ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடைசி நேர ஆதரவு
21 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் 3 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். மீதமிருக்கும் மூன்று போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் ஷிவின் மட்டும்தான் பெண் போட்டியாளர். மீதமிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஷிவினுக்கு அதிகமான ரசிகர்கள், பிரபலங்களின் பாராட்டும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் விக்ரமனுக்கும் அவருடைய ரசிகர்களின் ஆதரவும், பிரபலங்கள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. அசீம்மிற்கு அவருடைய ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் கடைசி நேரத்தில் வாக்கு கேட்டு ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications