கேம் விளையாட வந்தீங்களா..ஆக்கி திங்க வந்தீங்களா?? சரமாரியாக கேள்வி கேட்ட பாலா..காரணம் இதுதானா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை பற்றி பாலா பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே பாலா யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார் என்ற ஒரு பேச்சு இருக்கும் நிலையில் தற்போது பேசிய பேச்சு அதை நிரூபிக்கும் வகையில் தான் இருக்கிறது.

பரிச்சயமான போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சுவாரசியம் மட்டுமல்லாமல் விறுவிறுப்பும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இந்த நிகழ்ச்சியும் இருந்தாலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஏற்கனவே பலருக்கும் பரிச்சயமானவர்கள் ஆக இருப்பதால் இங்கே சண்டை சச்சரவுகளுக்கும் கலவரங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த விளையாட்டை பற்றி நன்றாக புரிந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய பர்பாமன்ஸை ஹெவியாக காட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பிக்பாஸ் அல்டிமேட் இந்நகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த போட்டியாளர்களின் ஒருவரான பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்ட பாலாவும் ஆவர். இவருடைய கெத்தான கேரக்டரை பிடித்துப்போனதால் தான் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் நான்காவது சீசனில் ரன்னராக ஜெயிக்க வைத்தனர். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இவர் டைட்டில் ஜெயிக்கவில்லையே என்று ஃபீல் செய்துவந்தனர். இந்த நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றி பெறுவார் என்று தற்போது ரசிகர்கள் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

நான்காவது சீசனில் ரன்னர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் யார் மீதும் அதிகமாக அன்பு பாசம் என்று அடிமையாகாமல் பாலாஜி இருந்து வருகிறார் .இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் பிராங்க் செய்கிறேன் என்று அனைத்து போட்டியாளர்களும் பாடாய் படுத்தி விட்டார். பிக்பாஸ் சொன்னதாக பாலா சொன்ன வார்த்தையை நம்பி போட்டியாளர்களும இந்த வீட்டிற்குள் யாரை இரண்டு பேரை எலிமினேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர் யாராக இருப்பார்கள் அதற்குரிய காரணம் என்ற என்று அனைவரும் கூறிவந்தனர். அனைவரையும் பேச விட்டு கடைசியில் பாலாஜி இது பிக்பாஸ் சொல்லவில்லை நானாக சொன்னது என்று ஷாக் கொடுத்துவிட்டார்.

பாலாவின் ப்ராங்க்
பிக் பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே வனிதாவுக்கும் பாலாஜிக்கும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டிருக்கும் போது, இன்று பாலாஜி பிராங்க் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் வீட்டின் தலைவராக இருக்கும் என்னிடம் நீ சொல்லிவிட்டு பிராங்க் செய்யவேண்டும் என்று வனிதா கூறிக் கொண்டிருக்கிறார். வீட்டின் தலைவர் என்றால் அதற்காக எல்லாமே உங்க கிட்ட சொல்லிகிட்டு தான் செய்யணுமா என்று எதிர்கேள்வி கேட்டார் பாலாஜி. நீங்க எல்லாம் கேம் விளையாட தான் வந்தீங்களா?? இல்ல ஆக்கி சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக நீங்க வந்தீங்களா??என்று அனைத்து போட்டியாளர்களும் வார்த்தைகளால் விளாசி எடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் எங்கள் மனதில் நினைப்பதை அப்படியே பாலா கேட்டு விட்டார் என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications