அழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்!
சென்னை: இயற்கையோடு இயற்கையாக கிராமத்து வாழ்க்கைக்கு மாறிய தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
என்னதான் விதவிதமாக மேக்கப் போட்டுக்கொண்டு மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது இவர் நடத்தி இருக்கும் வயல் வரப்பு போட்டோஷூட் பெரும் வைரல் தான்.
சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போட்டோக்களை எடுத்து குவிக்கும் நடிகைகள் பலர் இருக்கின்றனர் ,அதில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.
போட்டோஷூட்
இவருடைய போட்டோ ஷூட் அடிக்கடி வைரலாகி வரும் நிலையில் தற்போது வயல் வெளியில் கண்டாங்கி புடவை கட்டிக்கொண்டு, ஜாக்கெட் போடாமல் கோணலாய் கொண்டையை போட்டுக்கொண்டு இயற்கையை ரசித்தபடி கிறங்கடிக்கும் பார்வையை பார்த்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இவர் போட்டோசூட் ஆரம்பிக்கும் பொழுது இதேபோல புடவையில் போட்டோஸ்கள் போட்டதால் பெரும் பாப்புலர் ஆனார் .
கண்டாங்கி சேலை கட்டி
அதற்கு பிறகு தற்போது மீண்டும் அந்த பாணியை கையில் எடுத்திருக்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக சூட்டிங்கில் அதிகமாக இல்லாததால் பலரும் போட்டோஷூட் ஆரம்பித்துவிட்டனர் .மேக்கப் போட்டு திரையில் கலக்கி கொண்டிருந்தவர்கள் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர்.
சீரியல் வில்லி
அதுபோலத்தான் தர்ஷா குப்தாவும் .சீரியலில் கலக்கி கொண்டிருக்கும் இவர் அதையும் தாண்டி தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையையும் அழகையும் வெளிகாட்டுவதற்காக போட்டோஷூட் செலக்ட் செய்து தன்னுடைய ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோஸ்கள் எடுத்து வருகிறார். இவருடைய ஒவ்வொரு போட்டோஸ் களும் பெரும் வைரலாகும் அதனால் இவருக்கு சீரியல்களை தாண்டியும் சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
முள்ளும் மலரும்
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் கதாநாயகியாகப் திரையில் காலடி எடுத்து வைத்து பலருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானாலும் அதற்குப்பிறகு நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் எல்லாம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்து வருகிறார் .சீரியல்களில் இவரைப் பார்த்து பலர் திட்டி தீர்த்தாலும் இவருடைய குழந்தைத்தனமான முகத்தையும் ,உதவும் மனதினையும் புரிந்துகொண்ட ரசிகர்கள் இணையதளங்களில் இவரை பாராட்டி வருகின்றனர் .
நல்லா வேலை பார்க்கணும்
ஆனால் இவர் சீரியல்களில் தன்னைப் பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் கூட அது எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் அதனால் நான் நன்றாகத்தான் என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார். போட்டோ சூட் மூலம் பல நடிகைகள் பிரபலமானது போல தற்போது தர்ஷாவின் போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது .
இது யாருக்கு போட்டி
இவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் இது யாருக்கு போட்டியாக இப்படி களம் இறங்கி இருக்கிறார்கள் என கலாய்த்தாலும் லேட்டஸ்டாக இவர் வயல்வெளியில் போட்டோ எடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போஸ்ட் போட்டதும் இவருடைய ரசிகர்களும் குஷியாக இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .ஆனாலும் கண்டாங்கி சேலையில் இயற்கையே பொறாமைப்படும் பேரழகியாக வயல் வரப்பில் இவர் சுற்றி திரிவதை பார்த்து என்ன அழகுடா சாமி என பலரும் பெருமூச்சுவிட்டு வருகின்றனர் .
வேற லெவல் கேப்ஷன்
போட்டோஸ் அப்லோடு பண்ணுனது மட்டுமல்லாமல் அதற்கு அவர் வேற லெவல் கேப்ஷன் போட்டிருக்கிறார். அது என்னவென்றால் எந்த ஒரு மனிதனின் உழைப்பும் பணம் ஆகலாம் ஆனால் விவசாயின் உழைப்பு தான் நமக்கு உணவாக மாறும் என கூறியிருக்கிறார் .இவருடைய தத்துவத்தை பார்த்து என்ன தத்துவம் கலக்கிட்டீங்க போங்க என நெட்டிசன்கள் கலைத்தாலும் ரசிகர்கள் மாஸ் தலைவி என இவருக்கு ஆதரவாக க்ரீன் ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.