For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தம் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் செய்த சாதனை.. கொண்டாடிய நடிகர்கள்..காரணம் இதுதானாம்

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது 300 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இந்த வெற்றியை சீரியல் நடிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக தாண்டியதற்கு ரசிகர்களிடம் நன்றி கூறியிருக்கிறார் அந்த சீரியலின் கதாநாயகி ஜனனி.

அதே நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் இதுதான் நடக்கிறது... வெளியே தெரியாத ரகசியங்கள் இருக்கு.. உளறிய கரிகாலன் எதிர்நீச்சல் சீரியலில் இதுதான் நடக்கிறது... வெளியே தெரியாத ரகசியங்கள் இருக்கு.. உளறிய கரிகாலன்

அதிகரிக்கும் ரசிகர்கள்

அதிகரிக்கும் ரசிகர்கள்

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் அதைப் பார்த்து வருவார்கள். ஆனால் தற்போது அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் இந்த சீரியலின் வரவேற்பு இளைஞர்களின் மத்தியிலும் நன்றாக இருக்கிறது. இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்களைப் போல இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரிப்பதன் விளைவாகவே இந்த சீரியலில் டிஆர்பியும் முன்னேறி வருகிறது.

டிஆர்பி யில் முன்னணி

டிஆர்பி யில் முன்னணி

2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வாரத்தில் இந்த சீரியல் கடந்த வாரத்தை விடவும் முன்னேறி இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் 9.11இல் இருந்தது. ஆனால் இந்த வாரம் 9.33இல் பெற்று முன்னணியில் இருக்கிறது. இந்த சீரியல் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது தான். இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது பொங்கல் பண்டிகையோடு அப்பத்தாவை காலி செய்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் செய்து இருக்கிறார். இது எப்படி நடக்கப் போகிறதா? அல்லது யாராவது தடுப்பார்களா என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்து வருகிறது.

என்ன நடக்கப் போகிறது

என்ன நடக்கப் போகிறது

ஏற்கனவே இந்த சீரியலில் முன்னணி கேரக்டராக இருப்பது அப்பத்தா தான். அதனால் அப்பத்தா கேரக்டரை முடித்து விட்டால் சீரியலுக்கு நல்லா இருக்காது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் அணியினர் ஸ்பெஷலான கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கின்றனர். அது வேறு ஒன்றும் இல்லை, இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இதற்கு நன்றி கூறி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கின்றனர்.

ஸ்பெஷல் நன்றிகள்

ஸ்பெஷல் நன்றிகள்

இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா ரசிகர்களின் சப்போர்ட் மற்றும் அன்பிற்கும் நன்றி என்று சக்தியோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பொங்கல் பண்டிகையோடு இவர்கள் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை சீரியலில் ரசிகர்களும் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

English summary
Sun TV's Ethirneechal serial has now crossed 300 episodes. Serial actors are celebrating this success.Janani, the heroine of the serial has thanked the fans for successfully crossing 300 episodes.At the same time, this serial has also taken the top position in TRP this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X