கோபியின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பாக்கியா... கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே..!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது.
ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கோபியின் திருமணம் மணவரை வரை சென்று விட்ட புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
ராதிகா மற்றும் கோபியின் திருமணத்திற்கு பாக்கியா தான் சமையல் செய்யப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் திருமண உடையில் இருக்கும் ராதிகா உடன் பாக்கியாவும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது..இப்பவாது இந்த முடிவை எடுத்தார்களே
விறுவிறுப்பான திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதை களம் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்று பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். எப்படியாவது கோபியின் திருமணம் நடக்காமல் இருந்து விட வேண்டும். பாக்கியா பாவம் என்று ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், கோபி அவருக்கு ஆசைப்பட்ட மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என ஒரு தரப்பினர் கோபிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கோபியின் திருமணம் எப்படியும் கடைசி நேரத்தில் நின்று விடும் என்பது பலருடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அவசர ஏற்பாடு
கோபி ராதிகாவை திருமணம் செய்வதற்காக பாக்கியலட்சுமியை டைவர்ஸ் செய்து விட்டார். ஆரம்பத்தில் கோபி பாக்யாவின் கணவர் என்று தெரியாமல் இருந்த ராதிகாவுக்கு கோபியை பற்றிய உண்மை தெரிந்ததும் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் ராதிகாவின் மனதினை மாற்றி தற்போது ராதிகாவும் திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட வெகு சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் திருமணத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என்று கோபி அவசரமாக வேலை செய்து வருகிறார்.
திருமண மண்டபத்தில் பாக்கியா
கோபி தன்னுடைய திருமணத்தை பற்றி அவருடைய அம்மாவிடம் தெரிவித்ததும் அவர் தற்போது கோபியின் தந்தையிடம் கோபியும் திருமணத்தை பற்றி கூறியிருக்கிறார். அவர் நான் எப்படியும் கோபியின் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கோபியின் அம்மா மீது சத்தியம் வேற செய்திருக்கிறார். இந்த நிலையில் கோபியின் திருமணத்தில் ராதிகா மணமேடையில் மணப்பெண் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்ததும் திருமணம் இந்த அளவிற்கு வந்துவிடுமா? ரசிகர்கள் கடைசி நேரத்தில் யாராவது திருமணத்தை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் திருமணத்திற்கு வழக்கமாக பாக்கியா இருக்கும் அதே உடையோடு மண்டபத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
கடைசியில் இப்படி செஞ்சுட்டாங்களே
கடைசியில் கோபியின் திருமணம் நின்று விடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு திருமண மண்டபத்தில் ராதிகாவோடு பாக்கியா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் கடைசியில் கணவரின் திருமணத்திற்கு மனைவியே பூ தூவி வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார் போல,பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கிடைத்தது தான் சந்தோஷம். தன்னுடைய கணவர் விட்டுப் போனதை விடவும் தான் சமையல் ஆர்டரால ஜெயித்து விட்டோம் என்று தான் மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.