மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த பாண்டியன் ஸ்டோர்...வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: இன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நெடும் தொடராக இது ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் இப்போது சீரியலில் இல்லை. இது ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டாப் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒன்றாக இருந்து வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்களை முடிவடைந்து நான்காவது வருடத்தில் அடி எடுத்து வைத்தாலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பல குடும்பங்களில் இந்த மாதிரி குடும்ப ஒற்றுமை இருப்பது இல்லை. என்பதாலோ, என்னவோ பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். நாளுக்கு நாள் சீரியல் ரசிகர்கள் அதிகரித்தாலும் ஆரம்பத்தில் இருந்த பல நடிகர்கள் இந்த சீரியலில் தற்போது இல்லை என்பது பலருக்கும் வேதனையாகத்தான் இருக்கின்றது.

அண்ணன் தம்பிகளின் பாசம்
டி ஆர் பி யில் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது தனது கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலில் தனம் கேரக்டரில் சுஜிதா நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்தான் இந்த சீரியலின் மூத்த அண்ணியாக இருந்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சத்தியமூர்த்தி கேரக்டரில் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார். மூத்த தம்பியாக ஜீவா கேரக்டரில் வெங்கட் ரங்கநாதன், அவருக்கு மனைவியாக மீனா கேரக்டரில் ராஜ்குமார், அடுத்த தம்பியாக கதிரவன் கேரக்டரில் குமரன் தங்கராஜன், அவருக்கு ஜோடியாக முல்லை கேரக்டரில் ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகு காவியா அறிவுமணி நடித்து வருகிறார். கடைக்குட்டி தம்பியாக கண்ணன் கேரக்டரில் சரவணன் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கேரக்டரில் ஆரம்பத்தில் வைசாலி தணிகா நடித்து வந்தார். அதற்கடுத்ததாக விஜே தீபிகா லட்சுமண பாண்டி நடித்து வந்தார். தற்போது அவரும் மாறி சாய் காயத்ரி அவருக்கு பதிலாக நடித்துவருகிறார்.
Recommended Video

டி ஆர் பி யில் முதலிடம்
குடும்பத்தில் இவர்களுக்கு அம்மாவாக லட்சுமி கேரக்டரில் ஷீலா நடித்து வந்தார். இவர் தற்போது இறந்து விட்டதாக கதை அமைந்திருப்பதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகி இருக்கிறார். அவருடைய இறப்பு குடும்பத்திலுள்ளவர்களை மட்டுமில்லாமல் சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. என்னதான் இது கதைக்காக நடந்ததாக இருந்தாலும் அவருடைய இறப்பு மற்றும் இறுதி சடங்கு காரியங்களை தத்துரூபமாக எடுத்து இருந்ததால் இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்கு முன்பு மீனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி,
மீனாவின் குழந்தையின் பெயர் வைப்பு பங்க்ஷன், தனத்தின் வளைகாப்பு பங்க்ஷன் என தொடர்ச்சியாக சந்தோஷமான நிகழ்ச்சிகளை காட்டி டிஆர்பியை உயர்த்திக் கொண்டிருந்தனர்.

நான்காவது ஆண்டு தொடக்கம்
இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பலர் மாறிவிட்டனர். விஜேசித்ராவின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இவர்தான் முல்லை கேரக்டரில் தத்ரூபமாக ரசிகர்களின் மனதில் பதிந்து இருந்தவர். ஆனால் இவர் திடீரென்று இறந்ததும் அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாமல் ரசிகர்கள் பலர் தவித்து வந்தனர். அவருக்குப் பிறகு குமரேசன் ஆக நடித்து வந்த நெல்லை சிவாவும் திடீரென்று உடல்நிலை குறைபாட்டினால் இறந்து விட்டார். இவர் இந்த வீட்டில் ஒரு தந்தையை போல அனைவருக்கும் இருந்து வந்ததும், இவருடைய அழகான தமிழ் பேச்சும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இவருடைய மறைவும் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பல மாற்றங்கள் நடைபெற்று இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விறுவிறுப்பு குறையாமல் தான் இருந்து வருகிறது. அதனாலேயே மூன்று வருடங்களை நிறைவு அடைந்தாலும் நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சீரியலுக்கும், சீரியல் நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயாக்கு புதிய சிக்கல்! ரோகிணிக்கு தெரிய வந்த உண்மை! மீனா செய்த அதிரடி -
மதுரை முத்துவின் மகள்களுக்கு நடந்த பங்க்ஷன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்! வியந்து போன மதுரை மாநகரம் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications