க்யூட்டான ஷபானாவின் போட்டோவை வெயிட்டாக வைரலாக்கும் ரசிகர்கள்...காரணம் இதுதானா?
சென்னை: தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரசிகர்களால் ஷபானாவின் போட்டோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு எந்தப்பக்கம் பார்த்தாலும் ஷபானாவின் திருமண போட்டோக்களாகத்தான் இருக்கிறது.
ரசிகர்களின் அன்பை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷபானா. முதல் சீரியலில் இவருடைய க்யூட்டான நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியலின் மூலமாக பலர் இவரை பார்வதி என்றுதான் அழைத்து வருகின்றனர். இவருடைய சீரியல் கேரக்டருக்கும் நிஜத்தில் இவருடைய கேரக்டருக்கும் அதிகமாகவே வித்தியாசம் இருந்து வருகிறதாம்.

குழந்தை மனம் மாறாத ஷபானா
செம்பருத்தி சீரியலில் அடக்கமான மருமகளாகவும், அன்பான மனைவியாகவும், குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு பெண்ணாகவும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் குழந்தை மனம் மாறாத ஒரு குறும்புக்கார பெண்ணாக தான் இருந்து வருகிறார் என்று இவருடைய தோழிகள் அடிக்கடி பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கின்றனர். எப்போதுமே ஜாலியாக இருக்கும் இவரிடம் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி தான்
ரசிகர்களின் ஆசைப்படியே இவர் சீக்கிரத்தில் திருமணம் இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர் காதலிக்கும் விஷயம் சமூக வலை தளத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் ஆரியனை காதலிப்பதை அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருந்தனர். ரகசியமாக இவர்களிருவரும் மோதிரம் மாற்றி எங்கேஜிமெண்ட் செய்துவிட்டார்கள் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

குறையாத ரசிகர்களின் அன்பு
திடீரென்று ஷபானாவின் திருமண செய்தியை கேள்விப்பட்டதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய நெருங்கிய தோழிகள் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் இவருடைய திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு இவருடைய போட்டோக்கள் சமூக வலைத்தளம் எங்கும் பரவி வருகிறது. இதை பார்க்கும்போது ரசிகர்களின் அன்பு இவர் மீது எவ்வளவு இருக்கிறது என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு திருமணம் முடிந்து பல நாட்கள் ஆனாலும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications