எது எல்லை, எது வரம்பு என்பதை சொல்ல வேண்டிய நேரமிது... கமலின் அதிரடி எச்சரிக்கை
சென்னை: இந்த வார பிக் பாஸ் பஞ்சாயத்தில் கமல் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பொம்மை விளையாட்டில் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை கண்டிப்புடன் முதல் ப்ரமோவில் குத்திக் காட்டி இருக்கிறார்.
இந்த வாரத்தில் பஞ்சாயத்து வேற லெவல் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேரக்டரை காட்டும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கும் இருக்கும் குணநலன்களை வெளியே கொண்டு வரும் வகையில் தான் ப்ளான் போட்டு இருந்து வருகிறது. இந்த வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க வேண்டுமென்றால் முகமூடியுடன் இருக்க முடியாது. தன்னுடைய சுய கேரக்டரில் தான் இருக்க முடியும் என்பதை ஒவ்வொரு டாஸ்க்கும் நிரூபித்து வருகிறது. ஒரு சில போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நபராக இருப்பார்கள். போகப்போக தான் அவர்களுடைய உண்மை முகம் தெரிந்து இவரா இப்படி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒற்றுமை
ஒவ்வொரு சீசனிலும் இப்படி மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்து கொண்டிருந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுக்கொன்று ஆறுதலாகவும், அனுசரணையாக இருந்ததைப் பார்த்து, இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் இருக்காது என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏமாற்றமே மிஞ்சியது. நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்கள் தங்களுடைய உண்மை முகத்தை வெளியே காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

வேற லெவல் பர்பாமன்ஸ்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து இந்த வீட்டிற்குள் இருக்க வைத்திருக்கிறது. போட்டியாளர்கள் போடும் சண்டை சச்சரவுகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகரிப்பதால் தான் டிஆர்பி கூடும் என்பதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் செலவு பல மடங்கு செய்து வருகிறது. தற்போது பிக்பாஸ் மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆசைப்படியே போட்டியாளர்கள் இந்த வாரம் பர்பாமன்ஸ் பண்ணிவிட்டார்கள்.

கமலின் அதிரடி
பொம்மை பொம்மை டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இது வரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் ரசிகர்களின் காதுகளுக்கு கேட்க கூடாத வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். அதனால் தான் பிக் பாஸ் பீப் போட்டு அந்த வார்த்தைகளை மறைத்து இருக்கிறது. இதைப்பற்றி இன்று 'எது எல்லை எது வரம்பு' என்பதை தெளிவாக போட்டியாளர்களுக்கு சொல்ல வேண்டுமென்று கமல் கூறிய ப்ரமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications