கிருமிநாசினி திரவம் தயாரிக்கும் 2,750 டன் மூலப்பொருள்கள்.. உ.பி.யிலிருந்து திருச்சிக்கு வந்த ரயில்
திருச்சி: கிருமிநாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயிலில் திருச்சி வந்த 2,750 டன் மூலப்பொருள் தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்கள் முககவசம் அணிவதோடு, கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் மூலம் கழுவி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மருந்து கடைகளில் கிருமி நாசினி திரவங்களை வாங்கி வருவதால் பல கடைகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்தநிலையில் கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,750 டன் மூலப் பொருள் (மொலாசஸ்) நேற்று திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வந்தது.
மொத்தம் 50 வேகன்களில் வந்த இந்த மூலப்பொருளை மோட்டார் எந்திரம் மூலம் டேங்கர் லாரிகளில் ஏற்றி திருச்சி லால்குடியில் உள்ள தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட உள்ளது.

Recommended Video
இதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 1,000 டன் நெல்மூட்டைகள் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு நேற்று வந்தன. அவற்றை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேகன்களில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம் பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications