பாடல் வெளியீட்டு விழா பேச்சுக்கு... பட வெளியீட்டில் பரிகாரம் தேடிய அஸ்வின்!!???
சென்னை: அஸ்வின் தன்னுடைய திரைப்பட வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Recommended Video
மீண்டும் மைக்கை பிடித்ததும் என்ன சொல்லப் போகிறாரோ என்று பலரும் ஆர்வத்துடன் அவருடைய பேச்சைக் கேட்டு வருகின்றனர்.

ரொம்பவே மாறி விட்டார்
முழுவதுமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பிருந்த அஸ்வினாக மாறி..."என்ன சொல்லப் போகிறாய்" பட வெளியீட்டில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதுதான் உண்மையான அஸ்வினா..!!?? இல்லை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியது உண்மையான அஸ்வினா..!!??என்று வீடியோவை பார்த்தவர்கள் குழம்பும் அளவிற்கு குப்புறவே.. விழுந்து... விட்டார்..!!

தெளிவு வந்துவிட்டதா??
ஒரு மனிதனுக்கு நிம்மதியே தூக்கத்தில் தான்... ஆனால் அதே தூக்கத்தால் அஸ்வின் தன் நிம்மதியை தொலைத்து விட்டு, கொஞ்ச நாட்களாக தன் எதிர்காலத்தை குறித்த கேள்விக்குறியிலே... இருந்து வந்திருப்பார்.அந்த அளவிற்கு நெட்டிசன்கள் இவரை பாடாய் படுத்தி விட்டனர் .பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய பேச்சுக்கள் எந்த தரப்பினராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்ததால் அதற்கான எதிர்வினை பட வெளியீட்டை சந்தேகமாக்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் எல்லாம் முடிந்து தற்போது படம் வெளியான பின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் அஸ்வின்.

பவ்யமான பேச்சு
இன்று பட வெளியீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அஸ்வின்..' தனக்கு இந்த பட வெளியீட்டு கொண்டாட்டங்கள் எல்லாம் புதிது என்றும், நானும் மற்றவர்களைப் போல் சாதாரண ஆள் தான் என்று கூறியுள்ளார்.இதை பார்த்த இணையவாசிகள் நீங்க திருந்திட்டீங்கனு நம்புறோம், அதுக்காக ரொம்ப நடிக்காதீங்க என்றும், உங்களை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூக வலைதளங்கள் தான் உங்கள் தலைகணம் ஏறிய பேச்சால் ஓவர் நைட்டில் தூக்கி எறிந்தது.. இதை புரிந்து கொண்டு இந்த அடக்கத்தை அப்படியே மெயிண்டன் பண்ணுங்க... என்று பலர் இவருக்கு அறிவுரை வழங்கி இன்னும் பல உயரம் காண வாழ்த்தி வருகின்றனர்.

பலன் கிடைக்குமா?
பாடல் வெளியீட்டு விழா வில் பேசிய பேச்சிற்கு பரிகாரமாக பட வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்திக்கொண்ட அஸ்வின், அதில் கொஞ்சம் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு மிடில் கிளாஸ் பையனாக இருந்து தான் ஹீரோவாக உயர்ந்துள்ளதை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அடக்கமாக கூறி அனுதாபத்தை தேடிக்கொண்டார். தூங்கிக்கொண்டிருந்த அஸ்வின் எழுந்து விட்டார் என்பதை அறிந்து இனிமேலாவது நெட்டிசன்கள் இவரை தங்களது வலையில் இருந்து விடுவித்து.. ஆதரவளிப்பார்களா..!!?? என்று இவர்கள் சந்தேகங்களை கிளப்பி இருக்கின்றனர்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications