சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி தெரிந்த உண்மை.. அடி வெளுத்து வாங்கிய விஜயா! வீட்டிற்கு வந்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 2ஆம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு வெளியே போன அண்ணாமலை மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி செய்த செயலால் கோபமான விஜயா ரோகிணியை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை தன்னுடைய சொத்துக்களை பிரிப்பதற்கு முத்து சம்மதிக்கவில்லை என்பதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். ஆனால் அண்ணாமலை மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் சாப்பிடவே மாட்டேன், குடித்துக்கொண்டு இருப்பேன் என்று அண்ணாமலை நண்பரிடம் முத்து சொல்லி இருக்கிறார். அதேபோல விஜயாவிற்கு மயக்க மாத்திரை கொடுக்க வேண்டும் என்று ரோகிணி பிளான் போட்டு வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை வீட்டிற்கு வராததால் விஜயாவிற்கு டென்ஷனாக இருக்க, தலைவலி வருகிறது. உடனே இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரோகிணி டீ போட்டுட்டு வரேன் என்று போகிறார். பிறகு அந்த டீயில் தன்னுடைய தோழி தந்த மாத்திரையை போட்டு கலக்குகிறார். அதைடியே விஜயாவும் குடித்து விடுகிறார்.
அதற்குப் பிறகு ரோகிணிக்கு அவருடைய தோழி மகேஸ்வரி போன் செய்து நான் கொடுத்தது தூக்க மாத்திரை இல்லை என்று வைட்டமின் டேப்லெட் என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்டால் நன்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்றும் சொல்கிறார். அப்போது ரோகிணியை வெளியே வா என்று விஜயா கூப்பிடுகிறார். டீ நல்லாவே இல்லை என்று திட்டிவிட்டு மீனாவிடம் பூஜை அறையை சுத்தம் செய்து கோலம் போடுமாறு சொல்கிறார்.
பிறகு நான் என் புருஷன் வரும் வரைக்கும் இந்த பூஜை அறையை விட்டு வெளியே வரமாட்டேன். அங்கே பூஜை செய்து கொண்டுதான் இருப்பேன் என்று சொல்லி பூஜையில் உட்காருகிறார். பக்கத்தில் ரோகிணியையும் அமர வைக்கிறார். மந்திரம் சொல்லி பூஜை செய்கிறார் அப்போது ஒவ்வொரு முறையும் மந்திரம் சொல்லும் போது ரோகிணியின் தலையில் கொட்டுகிறார்.
அது போதாது என்று ரோகிணி கையில் சூடகம் ஏற்றி போட்டோவுக்கு காட்டுகிறார். இதனால் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அப்பா நாளைக்கு காலையில் வந்து விடுவார் என்று முத்து சொன்னதும் விஜயா பூஜையை நிறுத்துகிறார்.

மறுநாள் காலையில் அண்ணாமலை வருகிறாரா என்று வாசலையே எட்டி எட்டி பார்க்க விஜயா முத்துவிடம் என்னாச்சுடா இன்னும் வரல என்று கேட்கிறார். அதற்கு முத்து நான் பொய் சொன்னேன் என்று சொல்ல வரும்போது, அண்ணாமலை வீட்டிற்குள் வருகிறாய். அண்ணாமலையை பார்த்ததும் அவரை முத்துவும், விஜயாவும் மாறி மாறி கட்டி பிடித்துக் கொள்கின்றனர். இதற்கு இடையே விஜயா செய்த செயலை சொல்லி ரோகிணி மனோஜிடம் அழுது கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று நாளைக்கான எபிசோடில் பார்க்கலாம்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications