சிறகடிக்க ஆசை: திமிரால் சிக்கும் மனோஜ்.. நல்லது செய்த முத்துவுக்கு அவமானம்! அருணின் சூழ்ச்சி, விஜயாவுக்கு பிரச்சனை
சென்னை: (Siragadikka Aasai serial Today Episode ) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2026 பிப்ரவரி 9ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் - ரோகிணி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதால், அதற்காக வித்யா மற்றும் மலேசியா மாமாவை சாட்சியாக செட் பண்ணி இருக்கிறார் முத்து. இந்த விஷயம் மனோஜ் மூலம் ரோகிணிக்கு தெரிய வர, அவர் கடுப்பாகிறார்.
அதுபோல ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு போகும் ரவி, அவளிடம் மன்னிப்பு கேட்டு, அதே ரெஸ்டாரண்டிலேயே வேலை பார்க்க சம்மதிக்கிறார். ஆனால், ஸ்ருதி ஒரு கண்டிஷன் போடுகிறார். நீத்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை நான் வீட்டுக்கு வர மாட்டேன் என சொல்லிவிடுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial Feb 9, 2026 episode) ஆரம்பத்தில், ஸ்ருதி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா, அவரை தனியாக அழைத்து சென்று அட்வைஸ் பண்ணுகிறார். ரவி உங்களோடு வேலை பார்க்க சம்மதித்ததே பெரிய விஷயம். அதற்குள்ளேயே நீத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம்பிடித்தால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். அதற்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என கேட்கிறார்.
மீனா கொடுத்த ஐடியா
மீனாவின் பேச்சை கேட்ட ஸ்ருதி, உடனடியாக ரவியை வேலைக்கு சேர சொல்லுகிறார். பின்னர் வீட்டுக்கு வந்து, ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிலேயே வேலைக்கு சேர்ந்த விஷயத்தை ரவி சொல்ல, அதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மறுபக்கத்தில் ஷோரூமிற்கு மனோஜின் நண்பன் மொட்டை சந்தோஷ் லேட்டாக வருகிறார். ஏன் லேட்டு என்று மனோஜ் கேட்க, உங்க விஷயத்துக்காகத்தான் அலைஞ்சிட்டு வர்றேன் என்று சந்தோஷ் சொல்கிறார். என்னோட விஷயம் என்ன என்று மனோஜ் கேட்டதும், டைவர்ஸ் கேஸுக்கு சாட்சி சொல்ல மலேசியா மாமாவை பார்த்து பேசி வந்ததாக சந்தோஷ் சொல்கிறார்.

ரோகிணியின் அடுத்த நாடகம்
அந்த நேரம் பார்த்து ரோகிணி உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார். நாம பேசியது எல்லாம் ரோகிணிக்கு கேட்டிருக்குமோ என்று மனோஜ் பயப்படுகிறார். அதனால் ரோகிணியிடமே கேட்டுப் பார்க்கிறார். ஆனால் ரோகிணி தனக்கு எதுவும் தெரியாதது போல நடித்துக் கொள்கிறார்.
உண்மையில் மனோஜ் மற்றும் சந்தோஷ் பேசியது எல்லாமே ரோகிணி ஒட்டுக் கேட்டிருக்கிறார். எனக்கு எதிராக சாட்சி சொல்ல ஆள் செட் பண்ணுறீங்களா, நான் உனக்கு எப்படி செக் வைக்குறேன்னு பாரு என்று மனசுக்குள்ளேயே முடிவு செய்து கொள்கிறார்.
பிறகு தன்னுடைய நண்பர் என்று ஒரு டீலரை கூட்டிக்கொண்டு வந்தாரே அவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று ரோகிணி சொல்ல, அதற்கு மனோஜ் உன்னுடைய அக்கவுண்டில் இருந்து அனுப்பு என்று சொல்கிறார். ஆனால் ஒரே அக்கவுண்டில் இருந்து அனுப்பினால் தான் சரியா இருக்கும் என்று ரோகிணி சொல்ல தன்னுடைய போனை மனோஜ் கொடுத்து விடுகிறார். அதை வைத்து தான் ரோகிணி ஏதோ சூழ்ச்சி செய்யப் போகிறார் என்று தெரிகிறது.

அருண் போட்ட சபதம்
மறுபுறம் செல்வத்தை முத்து ஜாமீனில் வெளியே கொண்டு வருகிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் செல்வம் முத்துவை பார்த்து கதறி அழுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் அருண், வெளிய வந்துட்டேன்னு சந்தோஷப்படாத. இனி ஜென்மத்துக்கு நீ கார் ஓட்ட முடியாது. உன்னோட லைசன்ஸை கேன்சல் பண்ணுவதற்கான வேலைகளை நான் செஞ்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் செல்வம் மனமுடைந்து போய் கதறி அழுகிறார்.
கோர்ட்டில் ரோகிணி
மறுநாள் டைவர்ஸ் கேஸுக்காக அனைவரும் கோர்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வரும் ஸ்ருதியிடம் விஜயா, என்னம்மா இங்க வந்திருக்கே என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி, இந்த கோர்ட் சீனெல்லாம் சினிமால தான் பார்த்திருக்கேன். அதான் நேர்ல பார்க்கலாம்னு வந்தேன் என்று சொல்கிறார்.
அனைவரும் கோர்ட்டுக்குள் அமர்ந்திருக்க, ரோகிணி எண்ட்ரி கொடுக்கிறார். வந்ததும் விஜயாவைப் பார்த்து என்ன ஆண்டி மெலிஞ்சிட்டீங்களே என்று நக்கலாக பேசுகிறார். ரோகிணியின் பேச்சில் இருக்கும் திமிரைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் கடுப்பாகிறார்கள்.
இனி விசாரணை நேரத்தில் ரோகிணி என்னென்ன குண்டுகளை தூக்கிப் போடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications