இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுவது இவர்தானா?? கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்த போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் 5 வது சீசனில் ஆறாவது போட்டியாளராக வெளியேறுவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.
இதுவரைக்கும் 5 போட்டியாளர்கள் வெளியே சென்றிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
விவரங்களை பார்த்ததும் ரசிகர்கள் இவரா?? இந்த வாரம் என்று கேட்டு வருகின்றனர்.

முதல் எதிர்பாராத வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த ஐந்தாவது சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். இந்த நிலையில் முதல் வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில எதிர்பாராத காரணத்தால் நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார்.

முதல் எலிமினேஷன்
அவரைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நாடியா சிங் வெளியேறிவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவர் எப்படியும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று அங்கு உள்ளே இருந்த அண்ணாச்சி முதல் பலரும் கூறி வந்த நிலையில் முதல் வாரத்தில் இவர் வெளியேறியது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அபிஷேக் வெளியேற்றம்
மூன்றாவது போட்டியாளராக அபிஷேக் வெளியேறிவிட்டார். இவருடைய வெளியேற்றம் பலருக்கும் இப்ப வரைக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. இவர் இருந்த வரைக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருந்தது என்று போட்டியாளர்கள் கூறிவந்த நிலையில் பல நெகட்டிவ் அரசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று கூறி வந்த நிலையில் அவருக்கு குறைவான ஓட்டு அடிப்படையில் அவர் வெளியேறிவிட்டார்.

வெளியேறிய சுருதி
அபிஷேக்கை தொடர்ந்து சின்ன பொண்ணு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து சுருதியோட வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த வாரத்தில் சுருதி நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், சுருதிக்கு அதற்கு முன்பு தாமரையுடன் நடந்த தகராறு காரணமாக ரசிகர்களின் மத்தியில் இருந்த மதிப்பு குறைந்து விட்டது, அதனால் தான் குறைவான மதிப்பெண் கிடைத்தது அதனால் அவர் கடந்த வாரத்தில் வெளியேறிவிட்டார்.

கடைசி இடத்தில் அபிநய்
தற்போது ஆறாவது போட்டியாளராக யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் ஓட்டுகளின அடிப்படையில் கடைசி இடத்தில் இப்ப வரைக்கும் அபிநய் தான் இருந்து வருகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. கடைசி மூன்று இடங்களில் அபிநய் கடைசி இடத்திலும், அவருக்கு அடுத்ததாக பாவனியும், அவருக்கு அடுத்ததாக மதுமிதாவும் இருந்து வருகின்றனர். அதுபோல ராஜு இந்த வாரத்தில் முதலிடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications