இதனால்தான் நான் ரஞ்சித் அண்ணாவை இன்னும் பார்க்கவில்லை...ஃபீல் பண்ணும் இசைவாணி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ரஞ்சித்தை சந்திக்கும் காரணம் குறித்து இசைவாணி வெளியிட்டுள்ளார்.
ரஞ்சித்தின் அன்பு தங்கையாக வலம் வந்து கொண்டிருக்கும் இசைவாணி எதற்காக ரஞ்சித்தை சென்று பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தற்போது இசைவாணி, ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்பதால் பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன.

பதிலைக் கூறிய இசைவாணி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகியான இசைவாணி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் பல்வேறு வதந்திகள் அவரைப்பற்றி பரவி வருகிறது. அதற்கு அவரே பதில் கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் இவ்வளவுதானா?? இது தெரியாமல் நாங்கள் வேற வெளியாகும் செய்திகளை நம்பி விட்டோமே!!என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடிமட்டத்தில் பிறந்து கஷ்டப்பட்டு தற்போது தான் மேல் வந்து இருக்கும் நிலைக்கு தன்னுடைய முயற்சி ஒன்றே காரணம் என்று வளர்ந்து கொண்டிருக்கும் இசைவாணி தற்போது அவருடைய ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

வளர்ச்சிக்கு காரணமான அண்ணன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் பல யூடியூப் சேனல்களில் பாடல்களில் பாட்டு பாடி பிரபலமாக இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் தான் இருந்துள்ளார். தற்போது இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அவர் பாடிய கானா பாடல்கள் சினிமாக்களில் ஒலிக்கும் அளவிற்கு இவருடைய வளர்ச்சி இருந்து வருவதற்கு பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். அதில் ஒருவர்தான் ரஞ்சித் இவர் பல பாடகர்களை ஒன்றிணைத்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்.

ஏதும் கோபமாக இருக்குமோ
ரஞ்சித்தின் அணியில் ஒரு உறுப்பினராகவும், அவரின் சகோதரியாகவும் இருந்துவரும் இசைவாணி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பும் ரஞ்சித்திடம் ஆசி வாங்கிவிட்டு தான் செல்வாராம். அதுபோல நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகும் ரஞ்சித்தை பார்த்து அவரிடம் பேசி விடுவது தான் அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இசைவாணி இன்னும் ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் என்ன ஆச்சு!!??ஏதும் அண்ணனுக்கு கோபமா??என்றவாறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுதான் காரணமா
ரசிகர்களின் கேள்விக்கு இசை வாணியும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அண்ணனை சென்று சந்திக்க நினைத்தேன். ஆனால் அவர் தற்போது ஊரில் இல்லை. அதனால் தான் அவரை பார்க்க முடியாமல் இருக்கிறது. அவர் ஊருக்கு வந்ததும் நான் சென்று பார்த்து விடுவேன் வேறு ஒரு காரணமும் இல்லை என்று தெளிவாக விளக்கியுள்ளார். இதைக் கேட்ட பிறகுதான் ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்களாம்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications