மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிய மகாலட்சுமி.. இவ்வளவு நாட்களுக்குள் இப்படியா?
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது செய்த செயல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மீண்டும் தன்னுடைய பழைய வேலையை செய்து வருகிறார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயலலிதா! நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! ஆணையத்திடம் ’மாஜி’ சொன்ன ரகசியம்!
ரெஸ்ட் கொடுத்த இணையவாசிகள்
ஒரு சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தை எந்த பக்கம் திருப்பினாலும் அதில் தவறாமல் இடம் பிடித்து வந்த சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கிறார் போல. இந்த நிலையில் மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.
இணையதளத்தில் பிரபலம் தான்
ஏற்கனவே முதல் திருமணத்தில் மகாலட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளை சிக்கி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயர் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தங்களுடைய இரண்டாவது திருமணத்தை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் எளிமையான முறையில் செய்து முடித்து இருந்தனர்.ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்களுடைய திருமண செய்தி சமூக வலைத்தளத்தை பலரையும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நெட்டிசன்கள் இவருடைய திருமண புகைப்படங்களை வைத்து கலாய்த்தும் வாழ்த்துக்களை கூறியும் வந்தனர்.
திருமணத்தை குறித்து வந்த குற்றச்சாட்டு
மகாலட்சுமி தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டதால் அவர் பணத்திற்காகத்தான் இப்படி செய்து இருக்கிறார். அதனால் தான் அவருக்கு உருவ அளவில் கொஞ்சம் கூட ஒற்றுமையே இல்லாத ரவீந்தரை இவர் திருமணம் செய்திருக்கிறார். என்றெல்லாம் நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் நடித்து வந்த அன்பே வா சீரியலில் தொடர்ந்து வாசுகி கேரக்டரில் மகாலட்சுமி நடித்து வருகிறார்.
மீண்டும் பழைய நிலையில்
திருமணத்திற்கு பிறகு கணவரோடு எடுக்கும் புகைப்படங்களை அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வந்த மகாலட்சுமி தற்போது இவர் இதற்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் பொருள்களுக்கு பிரமோஷன் செய்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இனி இதையெல்லாம் மகாலட்சுமி செய்ய மாட்டார் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும், தயாரிப்பாளரின் மனைவியாக இவரும் தயாரிப்பு பணியை தொடங்குவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் மகாலட்சுமி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறாரே என்று வருத்தத்தோடும், ஏமாற்றத்தோடும் கமெண்ட்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.