பீகாரில் பாஜக-16-24, ஐ.ஜனதா தளம்: 7-13, ஆர்ஜேடி 6-10, காங். 0-4 இடங்கள் கைப்பற்றும்: கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா 16 முதல் 24 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதாவுக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 0-4 இடங்கள் மட்டும்தான் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது ஐபிஎன் கருத்து கணிப்பு

கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?
லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் பீகாரில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்ற கேள்விக்கு பாஜக: 16-24, ஐக்கிய ஜனதா தளம்: 7-13, ராஷ்டிரிய ஜனதா தளம்: 6-10, காங்கிரஸ்:0-4 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம்?
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் கட்சிகளுக்கு கிடைக்கு வாக்கு சதவீதம்
காங்கிரஸ்- 11%. பாஜக -39%. ஐக்கிய ஜனதா தளம் -20%. ராஷ்டிரிய ஜனதா தளம்-15%, லோக்ஜனசக்தி-2%, ஆம் ஆத்மி-3% வாக்குகள் கிடைக்குமாம்.

பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால்?
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம்
ஐக்கிய ஜனதா தளம்- 38%, ராஷ்டிரிய ஜனதா தளம்-23%,. பாஜக-23%, காங்கிரஸ்- 4%,. லோக்ஜனசக்தி- 3% வாக்குகள் கிடைக்குமாம்.

பீகார் முதல்வர் பற்றி..
பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் செயல்பாடுகள் பற்றி? என்ற கேள்விக்கு 63% பேர் திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர். 36% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் செயல்பாடு குறித்து
மத்திய அரசின் செயல்பாடு குறித்து பீகார் மாநில மக்களில் 77% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 17% பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து
பிரதமர் மன்மோகன்சிங்கின் செயல்பாடு குறித்து பீகார் மாநில மக்களில் 70% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 24% மட்டுமே திருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பிரதமராக யாருக்கு ஆதரவு?
பிரதமர் பதவிக்கு யாருக்கு பீகார் மாநில மக்களின் ஆதரவு என்ற கேள்விக்கு
மோடி-39%. ராகுல்- 9%, சோனியா-3%. மன்மோகன்சிங், அத்வானி- தலா 1%. நிதீஷ்குமார்-15%, லாலு பிரசாத்-11%, ராம்விலாஸ் பஸ்வான், கேஜ்ரிவால் ஆகியோருக்கு தலா 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications