Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகையை கடத்தி “அந்த” வீடியோ..ஹேக்கர்களுடன் நடிகருக்கு தொடர்பு? கைதாகிறாரா காவ்யா மாதவன்? பரபர கேரளா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : கேரளாவில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கு குறித்த முன்னேற்ற அறிக்கை இன்று குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அப்போது அந்த கும்பல் நடிகையை வீடியோ எடுத்ததாகவும் இந்த கும்பலுடன் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்தனர்.

நடிகை பாலியல் வழக்கு

நடிகை பாலியல் வழக்கு

நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அதன் முன்னேற்ற அறிக்கை இன்று குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும் விசாரணைக்கு ஏப்ரல் 15ம் தேதி காலக்கெடு முடிந்துள்ள நிலையில் குற்றப்பிரிவின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகை காவ்யா மாதவன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு

சிறப்பு விசாரணைக் குழு

இந்த வழக்கில் புதிதாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், பல சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விசாரணைக் குழு கருதுகிறது. இதை எதிர்த்து குற்றப்பிரிவு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபற்றி விசாரணைக் குழுவும் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கும். இதனிடையே, விசாரணை குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததாக ஏடிஜிபி எஸ் ஸ்ரீஜித் இன்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவ்யா மாதவன் கைது?

காவ்யா மாதவன் கைது?

முன்னதாக குற்றப்பிரிவு டிஎஸ்பி பைஜூ பவுலஸ் அளித்த விளக்கமும் திருப்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது. திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போது காவ்யா மட்டுமே சாட்சியாக இருந்தாலும், இந்த வழக்கில் காவ்யா சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் குழு கருதுகிறது. முன்னதாக, குற்றப்பிரிவு காவ்யாவை ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பில் ஆஜராகுமாறு கூறியது, ஆனால் அவர் சங்கடமாக இருப்பதாக கூறினார்.

ஹேக்கருக்கு நோட்டீஸ்

ஹேக்கருக்கு நோட்டீஸ்

இருப்பினும், ஆலுவாவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சாட்சியமளிக்க நடிகை கூறியதை குற்றப்பிரிவு ஏற்கவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் காவ்யா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், விசாரணையின் ஒரு பகுதியாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேக்கர் சாய் சங்கருக்கு குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரை இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+