கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரேநாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. தற்போது இந்தியாவில் 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்,












Click it and Unblock the Notifications