நோ நெவர்! நான் இருக்குற வரை நடக்காது.. ஸ்டாலின் ஸ்டைலில் பினராயி ஆக்சன்.. அடம்பிடிக்கும் கேரள ஆளுநர்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் சமீபத்தில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவை அம்மாநில அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும் என்று அம்மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "துணை வேந்தர்கள் தகுதியின் அடிப்படையிலே நியமிக்கப்படுவார்கள். இந்த அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக ஆளுநர் மறுத்துள்ளார்.

துணை வேந்தர்கள் நியமனம்
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் ஆளுநர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அம்மாநில அரசுக்கே வழங்கப்பட்டது. இதேபோல தெலங்கானாவிலும் துணை வேந்தர்களை அம்மாநில அரசே நியமித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலும் மாநில அரசு துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் மசோதவை சட்டமன்றத்தில் அம்மாநில அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

கொலை முயற்சி
இந்த மசோதா குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த 2019ல் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எனக்கு எதிராக கொலை முயற்சி நடந்தது. இதற்கு அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்தான் காரணம். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று குற்றம்சாட்டினார். மேலும், "மாநில அரசு ஆளுநர் அலுவலகத்தை கேவலப்படுத்தவும் இழிவுபடுத்தவும் முயற்சிக்கிறது." என்று கூறினார்.

அனுமதிக்க மாட்டேன்
மேலும், என்னை பணிய வைக்க மாநில அரசு ஒவ்வொரு யுக்தியையும் பயன்படுத்துகிறது என்று கூறிய அவர், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "எல்லாமே தகுதியின் அடிப்படையில்தான் நியமிக்கப்படும். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது. இது நிர்வாகத் தலையீட்டிற்குச் சமம். இந்த மசோதா கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும். நான் இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்." என்று கூறியுள்ளார்.

பூஞ்சி ஆணையம்
முன்னதாக மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையத்தில், 'அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாது. குறிப்பாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநடரிம் இருந்தால் அது அதிகாரத்திற்கு வழிவகுக்கும்' என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications