ரைட்டர் மடியில் உட்கார்ந்த பெண்.. ஆபாச உடையணிபவரிடம் சீண்டல்.. கோர்ட் சொன்ன விநோத தீர்ப்பு
ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.
Recommended Video
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்று, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

தோலுடன் - ஆடை
அப்போது, நீதிபதி ஒரு வினோதமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொடுவது தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டுதொந்திரவு செய்தால் அது பாலியல் வன்முறை இல்லை என்று தீர்ப்பளித்திருந்தார். இது அப்போதே பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

விநோதம்
இந்நிலையில், கேரள ஹைகோர்ட்டில் நீதிபதி ஒருவர் விநோத தீர்ப்பை அளித்துள்ளார்.. இங்கு வசித்து வருபவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன்... 74 வயதான சிவிக் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீது ஒரு பாலியல் வழக்கு எழுந்தது.. கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி பீச்சில், கடந்த 2020 பிப்ரவரியில் தன்னை சிவிக் சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்தார்.. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சிவிக் சந்திரன்
அந்த மனுவுடன், புகார் தந்த சம்பந்தப்பட்ட பெண், தன்னுடைய மடி மீது உட்கார்ந்திருக்கும் போட்டோவையும் சிவிக்சந்திரன் இணைத்து தந்தார்.. இதையடுத்து, இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அதற்கான உத்தரவு நகல் நேற்றைய தினம் வெளியானது... அதில், "முன்ஜாமீன் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன்னுடைய உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது.

மடியில் பெண்
உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தன்னுடைய மடியில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சொல்வதை நம்பமுடியவில்லை.. அதனால், சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என்று கருதப்படுகிறது. இதன் மூலம் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது, விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications