பிராமணர்கள் கால்களை கழுவிய பக்தர்.. வெடித்த சர்ச்சை.. கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பிராமணர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்யும் சர்ச்சை தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இவ்வழக்கில் கொச்சின் தேவஸ்வம் போர்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 25-ந் தேதிக்கு கேரளா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கேரளா மாநிலம் திருப்புனித்துறை ஸ்ரீ பூர்ணத்ர ஈசன் கோயிலில் 12 பிராமணர்களின் கால்களை கழுவி பக்தர் ஒருவர் பூஜை செய்தார்; தமது பாவங்களை போக்குவதற்காக 12 பிராமணர்களின் கால்களை அந்த பக்தர் கழுவினார் என கேரளா கமுதி என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

கேரளாவில் சர்ச்சை
கேரளாவில் இந்த செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய மூடப் பழக்க வழக்கங்கள் நீடிப்பதா? என்கிற விவாதமும் களைகட்டியது. இதனைத் தொடர்ந்து பாத பூஜை தொடர்பாக கேரளாவின் தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், கொச்சின் தேவசம் போர்டுவிடம் அறிக்கை கேட்டிருந்தார்.

நிறுத்த அறிவுறுத்தல்
இதுகுறித்து கொச்சி தேவசம் போர்டு தலைவர் வி.நந்தகுமாருடன் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்தும் விளக்கம் கேட்டார். அப்போது சீர்திருத்தங்களுக்கு பெயர் பெற்ற கேரளாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய பழமையான நடைமுறைகளைத் தவிர்க்க தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். மேலும் நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற நடைமுறைகளை மற்ற தேவசம்போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கேரளா ஹைகோர்ட் விசாரணை
இதனிடையே இந்த விவகாரத்தை கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் இந்த வழக்கை இன்று விசாரித்தனர். இவ்விசாரணையின் போது கொச்சின் தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பக்தர்கள் யாரும் 12 பிராமணர்களின் கால்களை கழுவவில்லை. தந்திரிதான் 12 பிராமணர்களின் கால்களை கழுவினார். அது ஒரு பூஜை நடைமுறை என்றார்.

பிப்.25-க்கு ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து கொச்சின் தேவசம் போர்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் அளித்தனர் நீதிபதிகள். மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications