சபரிமலைக்கு நீலிமலை, அப்பச்சிமேடு வழியிலும் செல்லலாம்.. பம்பையில் நீராட அனுமதி.. பக்தர்கள் மகிழ்ச்சி
திருவனந்தபுரம் : சபரி மலை கோயில் செல்லும் பக்தர்கள் இனி நீலிமலை, அப்பச்சிமேடு பாதைகளையும் பயன்படுத்தலாம் என பத்தனம்திட்டா மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பச்சிமேடு, நீலிமலை பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த வழியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறிபிட்டார். இனி பக்தர்கள் தடையின்றி அந்த பாதைகளை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம் என தெரிவித்தார்.
அதிகாலை 2 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த வழியில் செல்ல பக்தர்களுக்கு தடை இல்லை எனக் கூறிய அவர் பம்பை ஆற்றில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சபரி மலை கோயில் செல்லும் பக்தர்கள் இனி நீலிமலை, அப்பச்சிமேடு பாதைகளையும் பயன்படுத்தலாம் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யர், பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பச்சிமேடு, நீலிமலை பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த வழியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறிபிட்டார்.
எனவே இனி பக்தர்கள் தடையின்றி அந்த பாதைகளை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம் என தெரிவித்தார். மேலும் அதிகாலை 2 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த வழியில் செல்ல பக்தர்களுக்கு தடை ஏதும் இல்லை என குறிபிட்ட ஆட்சியர் பம்பை ஆற்றில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கோயிலிலேயே பக்தர்கள் தங்கவும், ஓய்வு எடுக்கவும் அறைகள் வழங்க முடிவு எடுத்திருப்பதாகவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வு எடுக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பாதைகள் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி ஐயப்பன் சாலை வழியாக சபரிமலை கோயிலுக்கு சென்று வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications