ஆணாக இருந்து பெண்ணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வோர் கேரளாவில் அதிகரிப்பு
திருவனந்தபுரம்: ஆண்களாக இருந்து பெண்களாக அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் எண்ணிக்கை கேரளாவில் அதிகம் என்று சமூக நீதி துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வது இயல்பு .அது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு சமூக நீதித்துறை நிதி உதவி செய்கிறது.
எனவே இந்த புள்ளிவிபரங்களை அந்த துறை சேகரித்து வைத்துள்ளது.

கேரளாவில் அதிகம்
அதன்படி பெண்களாக இருந்து ஆண்களாக (trans men) அறுவை சிகிச்சை செய்வதை விடவும் ஆண்களாக இருந்து பெண்களாக (tans women) அறுவை சிகிச்சை செய்பவர்கள் எண்ணிக்கை கேரளாவில் அதிகமாக, இருக்கிறது 2018-19ம் நிதியாண்டில் 19 திருநங்கைகள் அரசிடமிருந்து அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி பெற்று உள்ளனர்.

அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகம்
2021-22 ஆம் நிதியாண்டில் இது 83 பேராக உயர்ந்துள்ளது. இதில் 41 பேர் திருநங்கை பெண்கள். அதாவது பெண்களாக அறுவை சிகிச்சை செய்தவர்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 127 பேர் அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி பெற்றுள்ளார்கள். திருநங்கை பெண்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் திருநங்கை ஆண்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குகிறது கேரள அரசு.

சிக்கல்கள்
பெண்ணாக இருந்து, ஆணாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் செல்வதற்கு காரணம் அறுவை சிகிச்சையில் இருக்கக்கூடியசிக்கல்கள் மற்றும் குடும்பத்தினர் ஒதுக்குதல் தெருக்களில் தொந்தரவு செய்வோர் போன்றவை காரணம் என்று கூறப்படுகிறது.

பிரச்சினை
இது குறித்து திருநங்கை கிருத்திக் என்ற திருநங்கை ஆண் கூறுகையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு செலவு அதிகம். சிக்கல் அதிகம். ஆணுறுப்பு ஒன்று உருவாக்கப்படும். இதனால் பெரும்பாலானோர் இதை செய்து கொள்ள விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்
திருநங்கை பிரிவுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் சியாமா பிரபா கூறுகையில், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பின்பற்றப் படாமல் சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்வோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறுவது அவரது உடல் நிலை தொடர்பாக மருத்துவரிடம் சான்றிதழ் பெறுவது ஆகியவற்றோடு கடமை முடிந்ததாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வைத்து மட்டும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications