பர்தா அணிந்த உருவம்.. ஆண்போல் நடை! கேரள மக்களுக்கு வந்த சந்தேகம் - சங்கி மங்கிபோல் சிக்கிய சாமியார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பர்தா அணிந்து நடந்து சென்ற கோயில் பூசாரியை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் சங்கி மங்கி என்ற நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அதில் அசினை வேவு பார்க்க பல்வேறு வேடங்களில் செல்லும் வடிவேலு பர்தா அணிந்த வேடத்திலும் செல்வார்.
பர்தா அணிந்து முகம் வரை மறைத்திருக்கும் வடிவேலு மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்திருப்பார். அதை வைத்து விஜய்யின் நண்பர்கள் அவரை கண்டுபிடித்து தாக்குவார்கள். அப்போது வரும் மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துட்டேனே என்ற வசனம் இன்று வரை பேமசாக இருக்கிறது.

கேரள சம்பவம்
இதேபோன்ற உண்மை சம்பவம்தான் தற்போது கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியில் புர்கா என்று சொல்லப்படும் தலைமுதல் கால் வரை கருப்பு துணியால் மறைக்கப்பட்டு இருக்கும் உடையை அணிந்தபடி ஒருவர் நடந்து சென்று இருக்கிறார்.

மக்கள் சந்தேகம்
ஆனால், அவரது நடையும் பாவனையும் ஆண்போல் இருந்ததை கண்டு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் சந்தேகம் அடைந்து இருக்கின்றனர். உடனே புர்கா அணிந்து சென்றவரை தடுத்து நிறுத்தி முகத்தை காட்டுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அப்போது அது பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்திருக்கிறது.

கோயில் பூசாரி
அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஜிஷ்னு நம்பூதிரி (வயது 28) என்றும், மேப்பயூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக பர்தா அணிந்து வெளியில் வந்ததாக அவர் விளக்கமளித்து உள்ளார்.

அம்மை நோயா?
ஆனால், பூசார் ஜிஷ்னு நம்பூதிரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும் அவர் இதற்கு முன் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications