விரைவில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?
டெல்லி: ரயில்வே ஆணையத்தின் பரிந்துரைகளின்படி விரைவில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
மோடி அரசு பதவியேற்பதற்கு முன்னர் முந்தைய அரசால் பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் முறையே 14.2 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டன. ஆனால் பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே அமைச்சர் முடிவு செய்துகொள்ளட்டும் என்ற அடிப்படையில் அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் முந்தைய அரசின் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பை செயல்படுத்துவோம் என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரயில்வே ஆணைய பரிந்துரைப்படி கட்டண உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் இதுகுறித்த இறுதி முடிவை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவிப்பார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
அதே நேரத்தில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், ஆனாலும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என பிரதமர் அலுவலகத்திடம் ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் குறைந்த பட்சம் சாதாரண வகுப்பு கட்டணத்தை உயர்த்தாமல், முதல் வகுப்பு ஏ.சி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி கட்டணத்தை உயர்த்திக்கொள்ள பிரதமர் மோடி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனாலும் ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தும்பட்சத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணமும் ஓரளவு உயர்த்தப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications