கடனில் மூழ்கிய கிரீஸ் மீண்டு வருமா?: இன்று நடந்த முக்கிய வாக்கெடுப்பு
ஏதென்ஸ்: கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ் நாட்டில் ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து பொது மக்களிடையே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கலை, கலாச்சாரத்திற்கு பெயர் போன ஐரோப்பிய நாடான கிரீஸ் தற்போது கடும் கடன் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நிதியுதவி அளித்தது. மேலும் கடனில் சிக்கித் தவிப்பதால் சிக்கனமாக இருக்குமாறு அது அறிவுறுத்தியும் கிரீஸ் கேட்கவில்லை. விளைவு கடன் தொல்லை மேலும் அதிகரித்து அதன் நிலைமை மோசமானது.

கிரீஸ் பன்னாட்டு நிதியத்திடம் பெற்ற கடன் தொகையில் ஒரு தவணையான ரூ.10 ஆயிரத்து 500 கோடியை கடந்த 30ம் தேதிக்குள் செலுத்தத் தவறியது. இதனால் கடனை செலுத்தத் தவறிய முதல் வளர்ந்த நாடு என்ற அவப்பெயர் கிரீஸுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்குமாறு கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் கோரிக்கை விடுத்தார். மேலும் கூடுதலாக கடனும் கேட்டார். ஆனால் அவரது கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்க மறுத்துவிட்டது.
கடனை திருப்பி செலுத்த தவறிய நாடு கிரீஸ் என்று ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. இந்நிலையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து இன்று பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றால் கூடுதல் நிதி கிடைக்கும். இந்நிலையில் அந்த கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று பிரதமர் அலெக்சிஸ் மக்கள் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications