அமைச்சரவை விரிவாக்கம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சம்
மும்பை: நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் நடந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதன் விளைவாக சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளிகள் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளன.
மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. பல துறைகளிலும் சிறப்பாக பணியாற்றாத அமைச்சர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்பட்டன. திறமையான பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முன்பு கூடுதலாக பாதுகாப்பு துறையும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் நிதி அமைச்சக பொறுப்புகளில் முழு கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஆனால் நேற்றைய அமைச்சரவை விஸ்தரிப்பின்போது, பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டார். எனவே ஜெட்லி நிதி அமைச்சகத்தை முழு கவனத்துடன் நிர்வகிக்க முடியும். இது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் தந்துள்ளது.
இதன் தாக்கம் பங்கு சந்தையில் எதிரொலித்தது. வார தொடக்க நாளான இன்று பங்குச்சந்தை திறந்ததும், காளையின் ஆதிக்கமே காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 8,383.05 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 28,027.96 புள்ளிகளை தொட்டது. இதுவும் புதிய வரலாற்று சாதனையாகும்.
மருந்து துறை பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. குறிப்பாக சன் பார்பா, டாரோ பார்மா, டாக்டர்.ரெட்டிஸ் மற்றும் லுபின் போன்ற மருந்து துறை பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications