எரிக்கவும் - புதைக்கவும் இல்லை..அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீச்சு
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது உடல் தகனம் செய்யப்படவில்லை. மாறாக சரயு ஆற்றில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தனர். அதன் பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோவில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார். அயோத்தி ராமஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். இவருக்கு 85 வயது.
இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மஹந்த் சத்யேந்திர தாஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மஹந்த் சத்யேந்திர தாஸ் உயிரிழந்தார். 1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பின்போது ராமர் கோவிலின் பூசாரியாக மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அந்த வளாகத்தை அரசு கைப்பற்றியபோது அவர் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் பாலன்குயினில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சரயு ஆற்றில் ஜல சமாதி செய்யப்பட்டது. துளசிதாஸ் காட் பகுதியில் ஓடும் சரயு ஆற்றின் நடுப்பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடலில் கல்லை கட்டி படகில் இருந்து சரயு ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்டது. இப்படியாக அவரது உடல் ஜல சமாதியாக்கப்பட்டது.
இதுபற்றி அயோத்தி கோவிலின் புதிய தலைமை பூசாரி பிரதீப் தாஸ் கூறுகையில், ‛‛ராமானந்தி பிரிவில் மரபு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த மரபின்படி மஹாந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு ஆற்றில் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளளது. உடலில் கல்லை கட்டி ஜலசமாதி முறை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications