கும்பமேளாவில் பறிபோன 30 உயிர்கள்! இதெல்லாம் பெரிய பிரச்சினையா? ஹேமமாலினியின் பேச்சால் கடும் அதிர்ச்சி
லக்னோ: உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் அங்கு பலர் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் பலி ஒரு பெரிய சம்பவம் இல்லை என நடிகையும் பாஜக இம்பியுமான ஹேமமாலினி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் அங்கு சுவாமி தரிசனம் செய்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தற்போது வரை கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகா கும்பமேளாவில் நடந்தது பெரிய சம்பவம் இல்லை என பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர்," நாங்களும் கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். நல்ல முறையில் நீராடினோம். உத்தர பிரதேச அரசால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல. அது அவ்வளவு பெரிய சம்பவம் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே பார்க்கிறேன்.
கும்பமேளாவுக்கு அதிகப்படியான மக்கள் வந்திருந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம். மாநில அரசு தங்களால் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். தவறான விஷயங்களை சொல்வது தான் அவர்கள் வேலை" என கூறி இருக்கிறார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications