பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்த SRH.. நிதிஷ் ரெட்டிக்கு முதல் ஓவர் கொடுத்தால்! பாவம் காவ்யா மாறன்
பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் ஆர்சிபி அணி சேஸிங் செய்திருக்கிறது. இதனால் ஐதராபாத் அணி பவுலர்கள் பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆர்சிபி அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 80 ரன்களையும், அனிகேட் வர்மா 43 ரன்களையும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டிவிட்டது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்களையும், விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்களையும் குவித்தனர். கேப்டன் ரஜத் பட்டிதார் 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலமாக ஆர்சிபி அணி வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை தொடங்கி இருக்கிறது.
ஆனால் ஐதராபாத் அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்ததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எந்தவொரு ஐபிஎல் அணியும் நிதிஷ் குமார் ரெட்டி முதல் ஓவரை வீச வருவார் என்று கனவிலும் நினைக்காது. பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற திட்டம் இருந்திருந்தால், இஷான் கிஷன் அப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்க மாட்டார்.
இது போதாதென்று 5வது ஓவரிலேயே உனாத்கட் அட்டாக்கில் வந்தார். அப்போதே ஐதராபாத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம். அதேபோல் அனுபவம் இல்லாத ஹர்ஷ் துபேவும், 7வது ஓவரில் ஹர்சல் படேலும் அட்டாக்கில் வந்தனர். இப்படியொரு பவுலிங் லைன் அப்பை வைத்து கொண்டு பெங்களூர் மண்ணில் டிஃபெண்ட் செய்வதெல்லாம் அசாதாரணமான விஷயம்.
இந்தப் போட்டிக்காக காவ்யா மாறன் பெங்களூர் மைதானம் வந்து பார்த்திருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த சீசனிலும் ஐதராபாத் அணிக்கு தோல்வி உறுதி என்று பேசத் தொடங்கிவிட்டனர். இதனால் பேட் கம்மின்ஸ் விரைவில் ஐதராபாத் அணியில் இணைய வேண்டும் என்றும் ஐதராபாத் அணி ஆதரவாளர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications