இயற்கையோடு நாம் 2017: சிலம்பம்.. நிகழ்த்துக் கலை.. இன்னும்.. இன்னும் இனிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்
இயற்கையோடு நாம் எனும் சூழலியல் கருத்தரங்கில் 2 நாட்களுக்கு சிலம்பம், நிகழ்த்துக் கலை, பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: 'காடு' சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற சூழலியல் கருத்தரங்கம் சென்னையில் நாளை தொடங்குகிறது.
இயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையான நாளை தொடங்கி 2 நாட்கள் சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உணவு திருவிழா 2 நாட்களுக்கு நடத்துவது போன்றே கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி அசத்த உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

கிராமிய கலை
இந்நிகழ்ச்சியில், கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி, காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரபு இசைக் கருவிகளின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பழங்குடி மக்களான இருளர்களின் நிகழ்த்துக் கலையும் அரங்கேற உள்ளது.

சிலம்பம்
அதே போன்று, சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் சிலம்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை தகரி சிலம்பாட்டக் கலைக்குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி பார்வையாளர்களை குதூகலப்படுத்த உள்ளனர்.

கதை சொல்லி…
நிகழ்ச்சிக்கு வரும் சிறுவர்களுக்கு பயன்தரும் வகையிலும் அவர்களை மகிழ்விக்கவும் கதை சொல்லி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மாலை 4.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெற உள்ளது. குழந்தைகளோடு வந்து மகிழலாம்.

இன்னும் என்னென்ன..
இது தவிர, ஒளிப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதுதவிர, புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனையும் நடைபெற உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications