ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் - தீர்த்தக்கிணறுகளை திறக்க கோரிக்கை
ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று ஏராளமானோர் புனித நீராடினர். புனித நீராட தீர்த்தக்கிணறுகளைத் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமேஸ்வரம்: ஆடி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் ஏராளமானோர் அதிகாலை முதலே அக்னிதீர்த்தக்கடலில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்து வருவதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ராமநாத சுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இன்று காலை 6 மணி முதல் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததையடுத்து அதிகமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி சென்று வருகின்றனர்.
ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்து வருவதால் இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழக அரசு உடனடியாக ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications