கார்த்திகை பிறந்தது: ஐயப்ப, முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் - எங்கும் சரணகோஷம்
கார்த்திகை 1ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து ஐயப்பனுக்கும் முருகப்பெருமானுக்கும் விரதம் தொடங்கினர்.
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் ஏராளமான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். அதிகாலையிலேயே சாமியே சரணம் ஐயப்பா என்றும், முருகனுக்கு அரோகரா என்று சரணகோஷங்களை முழங்கி இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கும், மூன்றாம் படை வீடான பழனிக்கும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக நடந்து செல்வார்கள்.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ஆம்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சொல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை 1ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
அனைத்து மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொங்கினர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முன்தினம் முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்கிச் சென்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் கடை வீதிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் துளசிமாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை அதிகமாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர கருப்பு காவி கலர் துண்டுகள், வேட்டிகள் விற்பனையும் அதிகரித்தது. இதே போல திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டானர்.
சென்னையில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அதிகாலையிலேயே சரண கோஷம் முழங்கியது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் ஒலிக்கும் ஆன்மீக அலைகள் வீசும். மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications