திருப்பதியில் பிரம்மோற்சவம்..தமிழக பக்தர்களே ஸ்பெஷல் பஸ் ரெடி.. எங்கிருந்து புறப்படும்? முழு விபரம்
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்துகளை திருப்பதி இயக்க உள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
வழக்கமாக புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள். செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. எனவே பெருமாளை தரிசனம் செய்யப்போகும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பிரம்மோற்சவம்
பிரம்மோற்சவம் தொடங்கப்படும் நாளான செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு பேருந்துகள்
மேலும், அக்டோபர் 2ஆம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். அக்டோபர் 3ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை திருமலை பேருந்து
சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள்; வேலூர் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எங்கிருந்து எத்தனை பேருந்துகள்
கன்னியாகு குமரி - திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, குப்பம் வழியாக 15 பேருந்துகள் கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையன்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications