Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் தொடங்கி... அத்திவரதர் வரை ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் தரிசனம்

வானகரத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள் எழுந்தருள செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 10ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25,000 சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன.

திவ்ய தேசங்கள் என்பது பெருமாளுக்குரிய 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இந்த ஆலயங்களில் பன்னிரு ஆழ்வார்கள் பாடி நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும். ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மஞ்களாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

அப்படி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றழைக்கப்படுகிறது. இதில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் இருக்கிறது. மற்ற இரண்டு வானுலகில் இருபதாக வைணவ சமய வழிபாட்டாலர்கள் கூறுகின்றனர்.

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள்

சென்னை, கோயம்பேட்டை அடுத்து உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பக்தா்கள் பார்வையிடுவதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ஏ.ஜி.சி.மீடியா நிர்வாக இயக்குனர் ஜி.மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலாளர் சி.ரமேஷ் மற்றும் வெங்கட்ரமணன், ராஜ் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-

ஒரே இடத்தில் 108 பெருமாள்கள்

பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர்.தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு பெருமாளுக்கும் தினசரி அந்தந்த கோவில்களில் எவ்வாறு பூஜைகள் நடைபெறுமோ? அதுபோன்று பூஜைகள் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்பட்ட பின்னர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

 திருப்பதி பெருமாள் கோவில்

திருப்பதி பெருமாள் கோவில்

இங்கு அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதத்தை வீடுகளுக்கு எடுத்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் போன்ற பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களின் வசதிக்காக உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. 300 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பெருமாளை தரிசிக்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறப்பு கட்டணமாக ரூ.300ஆம் வசூலிக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 வரை தரிசனம்

ஏப்ரல் 10 வரை தரிசனம்

பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களைத் தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பெருமாள்களை நேரில் தரிசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+