Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்பது கோளும் ஒன்றாய் கொண்ட பிள்ளையார்..எந்த ராசிக்காரர்களுக்கு அருளை வாரி வழங்குவார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும். விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை வணங்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது. 'வி' என்பதற்கு 'இல்லை' என்று அர்த்தம். நாயகன் என்றால் தலைவன் விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம' என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.

விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.

 ஞான காரகன் விநாயகர்

ஞான காரகன் விநாயகர்

விநாயகப் பெருமானை வழிபடுவதால், அனைத்து வகையான காரியங்களும் தடையின்றி வெற்றியடைவதோடு, பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கணபதியை வழிபடுவதால் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும். புதன் கிழமை விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், ஜோதிடத்தில் விநாயகப் பெருமானுக்கும் தனி இடம் உண்டு. ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது.

மேஷம்

மேஷம்

விநாயகப் பெருமானின் சிறப்பு அருளும் ஆசீர்வாதமும் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம். செவ்வாய் தைரியம், வலிமை, வீரம் மற்றும் வீரம் ஆகியவற்றின் அடையாளமாகும். விநாயகப் பெருமானின் சிறப்பு அருளால் இந்த ராசிக்காரர்களின் அனைத்து வேலைகளும் விரைவில் வெற்றிகரமாக முடியும் காரிய வெற்றி உண்டாகும். மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் 'வீர கணபதி' வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் சக்தி விநாயகரை வழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர், ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ' ஸ்ரீ வித்யா கணபதி' யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும். துலாம் ராசியினர் வானமே எல்லை என பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் 'ஷிப்ர ப்ரசாத கணபதி' யை வணங்கினால் நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்தை ஆளும் கிரகம் புதன். ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், கணிதம், தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் காரகமாகும். சிவனின் மகனான விநாயகப் பெருமான் அருளால் இந்த ராசிக்காரர்கள் விரைவில் மகிழ்ச்சி அடையப்போகிறார். தொழில், வியாபாரம் செய்பவர்கள்களுக்கு விநாயகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் ஆசிர்வாதத்தால், காரியங்கள் விரைவில் முடிவடைந்து, நினைத்த காரியம் வெற்றியடையும். மிதுன ராசியினர் 'லட்சுமி கணபதி' யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும். கன்னி ராசிக்காரர்கள் 'மோகன கணபதி' யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும்.

கடகம்

கடகம்

சந்திரன் ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ' ஹேரம்ப கணபதி' யை வணங்குதல் நல்லது. மிகவும் தைரிய குணம் கொண்ட, ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் 'விஜய கணபதி' யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

தனுசு

தனுசு

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற 'சங்கடஹர கணபதி' யை வழிபட்டு வர வாழ்வில் வளம் பெறுகும். குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசியினர், 'பால கணபதி' யை வணங்கி வர எல்லையில்லாத ஆனந்தம் உண்டாகும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் உடையவர்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்குள் தொலைந்து போகிறார்கள். விநாயகப் பெருமானுக்கு சனி தேவரின் மகர ராசியில் பிடித்தமானவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் வரும். செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலையில் எப்போதும் வெற்றிகள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் தங்களது புத்திசாலித்தனம் மற்றும் திறமையின் அடிப்படையில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதில் வல்லவர்கள். மகர ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் சிறப்பு அருளால் காரிய வெற்றி உண்டாகும். மகர ராசியில் பிறந்தவர்கள்'யோக கணபதி' யை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும். கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கி வர நல்ல புத்தி கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+