ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி.. அமெரிக்க தாக்குதலின் போது குண்டுவெடித்து மரணம்.. டிரம்ப் அறிவிப்பு!
சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
நியூயார்க்: சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.
சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது படையில் பாதியை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதன்பின் சிரியாவில் குர்து படைகளுக்கும் துருக்கி படைக்கும் இடையில் சண்டை நடந்தது. இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வேகமாக வளரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக சிரியாவில் மறைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி சிஐஏ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்.

யார் இவர்
ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக 2010ல் அபு பக்கர் அல் பக்தாதி பதவி ஏற்றுக்கொண்டார். 2013ல் இந்த அமைப்பு அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அந்த அமைப்பின் பெயர் ஐஎஸ்ஐஎஸ் - இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா என்று மாற்றப்பட்டது.

மோசம்
இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் அமெரிக்க படைகளின் கைகளில் சிக்காமல் இருந்தான். அமெரிக்க படைகள் சிரியா போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே வீழ்த்தியது. ஆனாலும் அபு பக்கர் அல் பக்தாதி மட்டும் சிக்கவில்லை.

திட்டம் போட்டார்
இவர்தான் ஐஎஸ் அமைப்பை உலகம் முழுக்க கட்டுப்படுத்தி வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அபு பக்கர் அல் பக்தாதி ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டார். அதுதான் அவரின் கடைசி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அபு பக்கர் அல் பக்தாதி எங்கே சென்றார், எங்கு திட்டங்கள் போடுகிறார் என்று தகவலும் வெளியாகவில்லை.

காயம் அடைந்தார்
2017 மற்றும் 2018ல் அமெரிக்க படை நடத்திய தாக்குதல் ஒன்றில் அபு பக்கர் அல் பக்தாதி காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. இவர் பலமுறை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 2018 ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட தொடங்கியதால், அபு பக்கர் அல் பக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்பது உறுதியானது.

பலியாகி விட்டாரா?
இந்த நிலையில்தான் சிரியாவில் நடந்த அமெரிக்க படையின் தாக்குதலில் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டு விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
|
என்ன நடந்தது?
இதற்காக டிரம்ப் காலையில், மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துவிட்டது, என்று டிவிட் செய்தார். சிஐஏ அமைப்பின் உதவியுடன் அபு பக்கர் அல் பக்தாதி கண்டுபிடிக்கப்பட்டார் என்று தற்போது உறுதியாகி உள்ளது.

எப்படி மரணம்
அமெரிக்க படை அவரின் இருப்பிடத்தில் தாக்குதல் நடத்த சென்ற போது தீவிரவாதி அபு பக்கர் தன்னிடம் இருந்து குண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலில் செய்யப்பட்ட சோதனை மூலம் அவர், அபு பக்கர் என்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications