செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 17 பேர் தப்பியோட்டம்: 2 பேர் சிக்கினர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 17 பேர் தப்பியோடினர். பட்டப்பகலில் அவர்கள் தப்பியோடிய சம்பவம், சீர்திருத்தப்பள்ளி காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 சிறுவர்களை ஆத்தூர் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே அரசினர் சிறுவர்களுக்கான சீர்திருத்த பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சிறுவர் இல்லத்தில், 27 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 இளம் குற்றவாளிகள், அறையில் இருந்த இரும்பு ஜன்னலை உடைத்து, துணிகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாயிறன்று மதியம் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு இல்ல கண்காணிப்பாளர் அளித்த தகவலின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸார், சிறுவர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். ஏ.எஸ்.பியின் உத்தரவின் பேரில் ஆத்தூர் வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர், மற்ற சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் சிறார்கள் இல்லத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தப்பிச் சென்ற சிறுவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீஸாரிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து, சிறுவர்கள் இல்லத்தை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறுவர்கள் தப்பி சென்ற பகுதிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி. மஞ்சுநாத், நலத்துறையின் கீழ் சிறுவர்கள் இல்லம் செயல்படுவதால், போலீஸார் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் செயல்பட முடியாது. எனினும், பதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பரிந்துரைப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications