வதவதன்னு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர்.. வளைத்துப் பிடித்துக் கைது
மதுரை: மதுரையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி முழுவதிலும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500ரூபாய் என பல கோடிக்கணக்கான பணத்தை வழங்கி வருகின்றனர் என புகார் நிலவுகிறது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் பல பகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவருகின்றனர் என்று சொல்கிறார்கள்.

இன்று மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி தேவதாஸ் என்பவர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்துகொண்டிருந்தபோது போலிசார் கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து அவரிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான 2ஆயிரம் ரூபாய் நோட்டிகளை போலிசார் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்ததாக தேவதாஸ் உள்ளிட்ட 4நிர்வாகிகளை போலிசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் வாக்காளர்களுக்கு சரமாரியாக பண விநியோகம் செய்து வருகின்றனர். இதில் கட்சி பாகுபாடே இல்லை. மக்களும் கூட பல இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு பணம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது எங்கு போய் முடியுமோ!
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications