பாலியல் புகார்: முதலில் இல்லவே இல்லைனு சாதித்த ராஜகோபாலன்.. ஒப்புக் கொண்டது எப்படி?
சென்னை: மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன், பின்னர் ஆதாரங்களை காண்பித்தவுடன் ஒப்புக் கொண்டார்.
சென்னை கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக பாடம் நடத்தியதாக புகார்கள் வெளியாகின.
இந்த புகாரை அடுத்து காவல் துறை துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மடிப்பாக்கத்தில் உள்ள ராஜகோபாலனின் வீட்டில் ராஜகோபாலன், அவரது மனைவி, அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜகோபாலன்
வீட்டிலிருந்து ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் அழிக்கப்பட்டன. போனிலும் அவரது கால் ஹிஸ்டரியும் அழிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாரணை
இதைத் தொடர்ந்து ராஜகோபாலனிடம் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தினர். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என கூறியிருக்கிறார். அதை கேட்ட போலீஸார் மாணவிகள் தரப்பில் வெளியான போட்டோக்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்களை காண்பித்தனர்.

ஒப்புக் கொண்ட ராஜகோபாலன்
இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகே தான் செய்த தவறுகளை ராஜகோபாலன் ஒப்புக் கொண்டார். ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புகார் கூறும் மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

லேப்டாப்
இதனிடையே ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னை அசோக்நகர் மகளிர் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications