கோவில் திருவிழா முன்பகை- சீர்காழி மோதலில் போலீஸ் ஏட்டு உட்பட 12 பேர் படுகாயம்!
சீர்காழி: நாகை மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு கிராமத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே கீழமூவர்கரை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தினந்தோறும், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இரண்டு கிராமத்தினர் மோதல்:
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண வந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தினருக்கும், கீழமூவர்கரை கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வழிமறித்து தாக்குதல்:
இதனால் இரு கிராமத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கீழமூவர்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்த சிலர் பூம்புகார் சென்றுவிட்டு, அகரபெருந்தோட்டம் கிராமம் வழியாக ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது அகரபெருந்தோட்டம் கிராமத்தினர் சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
கல், கட்டையால் தாக்குதல்:
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், கீழமூவர்கரை கிராமத்திற்கு சென்று, இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் தெரிவித்தனர். உடனே கீழமூவர்கரை கிராம மக்கள் 100 பேர் அகரபெருந்தோட்டம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது 2 கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.
12 பேர் படுகாயம்:
ஒரு டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் காயம் அடைந்த கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த சந்திரன், பாலகிருஷ்ணன், இளங்கோவன் , பிரவீன், குமார், சித்ரவேல், சசிக்குமார், கிருஷ்ணசாமி, குணசேகரன் ஆகிய 9 பேரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி:
இதேபோல், காயம் அடைந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மணி, ராஜேஷ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயம் அடைந்த பாரதி திருவெண்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடரும் பதட்டம்:
மோதல் குறித்த தகவல் கிடைத்ததும் திருவெண்காடு போலீஸ் ஏட்டு செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது கல்வீசப்பட்டதில் செல்வராஜ் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications