Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கும்பிடு.. மீசை வைத்த நபர் முத்துராமலிங்க தேவரா? புகைப்படம் உண்மையா? Fact Check

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரை போற்றி பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அத்துடன் அவர் குருஜி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வாக்கரை சந்தித்து வணங்கியதாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம்.

முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட காலங்களிலும் அதன் பிறகும் தென் தமிழக மக்களிடையே பெரும் செல்வாக்குடன் வளம் வந்தவர். தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் அவரை தனிப்பெரும் தலைவராக நூற்றாண்டுகள் கடந்தும் போற்றி புகழ்ந்து விழா எடுத்து வருகிறார்கள்.

இந்த சூழலில் முத்துராமலிங்க தேவர் மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கரை சந்தித்ததாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

 எச்.ராஜா வெளியிட்ட படம்

எச்.ராஜா வெளியிட்ட படம்

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எச்.ராஜா இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் அவர் வெளியிட்ட புகைப்படம் இன்று வரை பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தில் கோல்வாக்கர் மாலை அணிவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு நபர் கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார். அவரை முத்துராமலிங்க தேவர் என்று கூறி வருகின்றனர். அது தவறான தகவல் என்று பேஸ்புக்கிலேயே உண்மை கண்டறியும் செய்தி தளங்கள் ஸ்ட்ரைக் கொடுத்துள்ளன.

மறுப்புகள்

மறுப்புகள்

மறுபக்கம் இது தவறான தகவல் என்றும், அதில் இருப்பது முத்துராமலிங்க தேவர் இல்லை என்றும் அவர் சார்ந்த சமூக மக்களும், எழுத்தாளர்களும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த உண்மை தன்மையை அறியும் முயற்சியில் நாம் ஈடுபட்டோம். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பழைய பதிவு கிடைத்தது.

 ஆர்.எஸ்.எஸ் பதிவு

ஆர்.எஸ்.எஸ் பதிவு

அதில், கடந்த 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோல்வாக்கர் மதுரைக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விழாவின் படங்களோ, கலந்துகொண்ட தலைவர்களின் விபரங்களோ குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், முத்துராமலிங்க தேவர் தலைமறைவாக இருந்தார் என்றும் 1951 ஆம் ஆண்டே நாடு திரும்பினார் எனவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தலைமறைவான தேவர்

தலைமறைவான தேவர்

1949 ஆம் ஆண்டு கொல்கத்தா சென்று அங்கிருந்து முத்துராமலிங்க தேவர் சீனா சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அவர் கோல்வாக்கரை சந்தித்து இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சிலர் 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கோல்வாக்கர் பிறந்தநாள் விழாவில் முத்துராமலிங்க தேவர் கலந்துகொண்டதாக தகவல் வெளியிடுவதையும் பார்க்க முடிந்தது.

 தேவர் மலர் மறுப்பு

தேவர் மலர் மறுப்பு

இதற்கு முத்துராமலிங்க தேவர் குறித்து பல்வேறு அறிய வரலாற்று தகவல்களை வெளியிட்டு வரும் தேவர் மலர் இதழ் விரிவான விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் "தேவரவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கரை சந்திக்கவே இல்லை" என்ற தலைப்புடன் வந்த செய்தியில் புகைப்பட ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 தேவரின் பாஸ்போர்ட்

தேவரின் பாஸ்போர்ட்

அதில், 1955 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் பாஸ்போர்டில் உள்ள புகைப்படத்தில் மீசை இல்லாமல் நீளமான தலைமுடியுடனும் இருக்கிறார். ஆனால், பாஜகவினர் வெளியிட்ட படத்தில் இருக்கும் நபருக்கு மீசை இருப்பதுடன் நீளமான முடி இல்லை. இதனை அடிப்படையாக கொண்டு அந்த தகவலை மறுத்துள்ளது.

 நவமணி மறுப்பு

நவமணி மறுப்பு

முத்துராமலிங்க தேவரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று தகவல்களை திரட்டி வைத்து இருக்கும் நவமணி என்பவர், "1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்றதாக சொல்லப்படும் கோல்வாக்கர் பிறந்தநாள் விழாவில் முத்துராமலிங்க தேவர் பங்கேற்கவே இல்லை. இதுபோன்ற தகவலை புறந்தள்ள வேண்டும்" என்று கூறியதாக அதே இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 பர்மா பயணம்

பர்மா பயணம்

1949 ஆம் ஆண்டு தலைமறைவாகி 1951 ஆம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பும்போது முத்துராமலிங்க தேவர் தன்னுடைய மீசை முழுவதையும் மழித்து நீள தலைமுடியுடன் திரும்பியதாக தேவர் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1955 - 1956 ஆம் ஆண்டுகளில் முத்துராமலிங்க தேவர் பர்மா சென்ற படங்களில் அவர் மீசை இல்லாமல், நீள தலைமுடியுடன் இருக்கும் படங்களையும் தேவர் மலர் ஆதாரமாக காட்டியுள்ளது.

 அருப்புக்கோட்டை தேர்தல் வெற்றி

அருப்புக்கோட்டை தேர்தல் வெற்றி

ர்மாவுக்கு முத்துராமலிங்க தேவர் சென்ற சமயத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்றிலும் அவர் மீசை இல்லாமல் இருப்பதைக் காணலாம். அதேபோல், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற அருப்புக்கோட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெற்றிவிழாவில் தேவர் கலந்துகொண்ட படத்திலும் அவர் மீசை இன்றியே காணப்படுகிறார்.

 ஒரு படம்.. இருவேறு ஆண்டுகள்

ஒரு படம்.. இருவேறு ஆண்டுகள்

1949 ஆம் ஆண்டு மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் கோல்வாக்கர் மதுரை வந்ததாகவும் அப்போது முத்துராமலிங்க தேவரை சந்தித்ததாகவும் இருவேறு ஆண்டுகளை பதிவிட்டு ஒரே புகைப்படம் பகிரப்படுகிறது. நாம் மேலே சொன்னதைபோல் 1949 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் தலைமறைவானதால் அப்போது சந்திப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

Fact Check

வெளியான செய்தி

மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கருக்கு முத்துராமலிங்க தேவர் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு

முடிவு

சந்திப்பு நடந்த ஆண்டு மற்றும் படத்தில் இருக்கும் தேவரின் தோற்றம் வரலாற்றுடன் ஒத்துபோகவில்லை.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+