கேட்பரி சாக்லேட்களில் மாட்டிறைச்சி சேர்க்கப்படுவதாக பரவும் வதந்தி.. இதோ விளக்கம்!
சென்னை: கேட்பரி சாக்லேட்டுகளில் மாட்டிறைச்சி இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளத்தின் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஜெலட்டின் ஒரு மூலப்பொருளாக இருந்தால், அது மாட்டிறைச்சியிலிருந்து பெறப்பட்டதாகும் என்று அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'' தயவுசெய்து கவனிக்கவும், எங்கள் தயாரிப்புகளில் ஏதேனும் பொருட்களில் ஜெலட்டின் இருந்தால், நாங்கள் பயன்படுத்தும் ஜெலட்டின் ஹலால் சான்றிதழ் மற்றும் மாட்டிறைச்சியில் இருந்து பெறப்பட்டது," என்று கேட்பரி தெரிவிப்பதை போல இந்த வைரல் ஸ்க்ரீஷன் ஷாட் பரவி வருகிறது.
இதையடுத்து, வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும், இந்திய மக்கள் கேட்பரி தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்தியாவில் விற்கப்படும் கேட்பரி தயாரிப்புகளில் மாட்டிறைச்சி இருப்பதாகக் கூறி பலர் இந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், ஸ்கிரீன் ஷாட் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தங்கள் தயாரிப்புகளுடன் தொடர்புடையது அல்ல என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில், மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சி சார்ந்த பொருட்களும் விற்பனை செய்வது இல்லை என்றும், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து பொருட்களும் 100% சைவம். சாக்லேட்டின் ரேப்பரில் பச்சை புள்ளி வைக்கப்பட்டிருப்பது, சைவம் என்பதை குறிக்கிறது, " என்று கேட்பரி விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கூறப்படுவது: இந்தியாவில் விற்கப்படும் கேட்பரி சாக்லேட்டுகளில் மாட்டிறைச்சி உள்ளது.
முடிவு
முடிவு: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்கள் 100% சைவம்












Click it and Unblock the Notifications