வேலைதேடும் இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்..! இந்த ஆண்டு மட்டும் 8000 பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்
டெல்லி: இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களிலிருந்து இந்த ஆண்டு மொத்தம் 8000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்று அமேசான். அமெரிக்கா, கனடா என உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான் தான் டாப்.
ஆனால் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் அமேசானுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

8000 வேலைவாய்ப்புகள்
இந்நிலையில், இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களிலிருந்து மொத்தம் 8000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமேசான் நிறுவனத்தின் HR பிரிவு தலைவர் தீப்தி வர்மா கூறுகையில், "பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், கோயம்புத்தூர், புனே உட்பட நாட்டின் 35 நகரங்களில் நேரடியாக 8000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம். ஐடி, கஸ்டமர் கேர், நிதி, சட்டம் உள்ளிட்ட பணியிடங்களில் ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

20 லட்சம் பேருக்கு வேலை
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். ஏற்கனவே இந்தியாவில் நாங்கள் இதுவரை 10 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் நாட்டில் பெருந்தொற்றால் பலரும் வேலையை இழந்து வந்த சூழலிலும்கூட 3 லட்சம் பேருக்கு நாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்தோம்" என்றார்

செப் 16இல் வேலைவாய்ப்பு முகாம்
அமேசான் நிறுவனம் இந்தியாவில் சீராக வளர்ந்து வருகிறது. வரும் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்த அமேசான் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அமேசான் தனது முதல் வேலைவாய்ப்பு முகாமை இந்தியாவில் நடத்துகிறது. முற்றிலும் காணொலி மூலம் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், 21ஆம் நூற்றாண்டில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் தீப்தி வர்மா குறிப்பிட்டார்.

இது தொடக்கம் தான்
மேலும் செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் குறித்த பயிற்சியும் அளிக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் அமேசான் நிறுவனத்திற்கு 2ஆவது பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா இருப்பதாகத் தெரிவித்த தீப்தி வர்மா, அமேசானில் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடக்கம் தான் என்றும் வரும் காலங்களில் இன்னும் அதிக நபர்களை பணியமர்த்த அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் தீப்தி வர்மா தெரிவித்தார்.
-
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications