கோவை, மதுரை, தூத்துக்குடியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்.. நேரடி நியமனம்.. டிகிரி தகுதி தான்
சென்னை: கோவை, மதுரை, தூத்துக்குடி என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 122 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை (28 பணியிடங்கள்), மதுரை (15), தூத்துக்குடி (23) திருச்சி, (06), திண்டுக்கல் (14),சேலம் (13), விருதுநகர் (23) என 122 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வாரியாகவும் பிரித்து காலியிடங்கள் உள்ளன. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்துகொண்டால் ஆழ்வார் திருநகரி-02, கருங்குளம் -03, ஸ்ரீவகுண்டம் -03, சாத்தான்குளம் -03, உடன்குடி 02, கயத்தார்- 02, கோவில்பட்டி -03, ஒட்டப்பிடாரம் 01, புதூர் 02, விளாத்திகுளம் -02 என 23 காலியிடங்கள் தூத்துக்குடியில் உள்ளன.
கல்வித் தகுதியை பொறுத்தவரை இந்த பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி எம்.எஸ்.ஆபிஸ் குறைந்தபட்சம் 3 மாதம் சான்றிதழ் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கணினி மென்பொருள் சார்ந்த கல்வி தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருசக்கர வாகன உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
5 ஆண்டு அனுபவம்
முன் அனுபவத்தை பொறுத்தவரை மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, நன்னடத்தை சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு தேர்வு/ நேர்காணல் நடைபெறும். நியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை இயக்குநர்/ திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம்- 262101 தூத்துக்குடி மாவட்டம் - என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 16.02 2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications