காவலர் தேர்வு: ரிசல்ட் வந்தாச்சு.. எத்தனை பேர் தேர்வு தெரியுமா? அடுத்து என்ன செய்யனும்
சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் நேற்று இதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. காவலர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது.
மொத்தம் 18,689 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் இனி உடல் அளவீடு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆம் நிலை காவலர் பணியிடங்கள் 2,833 மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் 180 காலிப்பணியிடங்களும் தீ அணைப்பு துறையில் 631 தீ அணைப்பாளர் பணியிடங்களும் என மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது.
இதற்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள 2, 24,500 ஆண், பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் பெரும்பாலானோர் தேர்வு எழுதிய நிலையில், கடந்த ஒரு மாதமாக தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
18,689 பேர் தேர்ச்சி
எப்படியவது காவலர் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்வு எழுதிய சுமார் 2 லட்சம் தேர்வர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில்தான் தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காவலர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது.
மொத்தம் 18,689 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் இனி உடல் அளவீடு மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதாவது, தேர்வர்களுக்கு அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ள எடை, உயரம் உள்ளிட்டவை உள்ளதா என சரிபார்க்கப்படும். அதேபோல, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட உடல் தகுதி சோதனைகளும் நடைபெறும்.
உடல் தகுதி தேர்வு
மொத்தம் 3,644 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ள நிலையில், 1:5 என்ற அடிப்படையில் தற்போது ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பட்டியல் வெளியகியுள்ளது. இந்த பட்டியலில் தங்கள் பதிவு எண் இடம் பெற்றுள்ளவர்கள் அடுத்த கட்டமாக பிஎம்டி எனப்படும் உடல் அளவீட்டு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உயரம், chest measurements ஆகியவை சரிபார்க்கப்படும்.
இதில் தகுதி பெறுபவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு 24 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவு பெற்ற பிறகு இறுதிகட்ட தேர்வு பட்டியல் வெளியாகும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அப்டேட்டை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications