ஜெ. உயிலும், பணமும் பறிபோனதா? கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்.. சட்டசபையில் முதல்வர் பதில்
கொடநாடு பங்களாவில் இருந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டது என முதல்வர் சட்டசபையில் விளக்கம்
சென்னை : கொடநாடு பங்களாவில் வாட்ச், அலங்காரப் பொருட்கள் தவிர வேறு எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெயலலிதாவின் ஆடம்பர கொடநாடு பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த இந்த பங்களாவில் வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது.

ஆனால் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவும் சிறை சென்றதால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அதிலும் குறிப்பாக கொடநாடு பங்களா யார் கையில் இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்தது. இந்நிலையில் பங்களாவில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் அதனை தடுக்க முற்பட்டபோது காவலாளி ஒருவர் உயிரிழந்தது என்று தொடர் மர்மங்கள் அரங்கேறின.
ஜெயலலிதாவின் உயில் தேடி சென்ற கூலிப்படை என்றும் மாவோயிஸ்டுகளின் கொள்ளைத் திட்டம் என்று பரவலாக பல செய்திகள் கிளம்பின. இந்நிலையில் கொள்ளை தொடர்பான 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்று சசிகலாவிற்கு மட்டுமே தெரியும் என்று அனைவரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி கொடநாடு பங்களாவில் இருந்து கைக்கடிகாரங்களும், அலங்காரப் பொருட்களும் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications