தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம் பிரபஞ்சன்… சீமான் புகழாரம்
Recommended Video

சென்னை: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரிக்கே குடிபெயர்ந்தார். சில மாதங்களுக்கு முன் புதுவை அரசு பிரபஞ்சனுக்கு அவரது இலக்கிய பங்களிப்புக்கு பாராட்டுவிழா நடத்தி கவுரவித்தது.

57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சமீப காலமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.
பிரபஞ்சன் அவர்களின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு முறைமையை உருவாக்கி புகழ்வாய்ந்த எழுத்தாளராக வலம் வந்தவர் ஐயா பிரபஞ்சன் அவர்கள். புதுச்சேரியை பிறப்பிடமாக கொண்ட அவர் தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்.
புதுச்சேரியின் வரலாற்றினை ஆங்கிலேய அதிகாரிகளிடம் அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினை தழுவி அவர் எழுதிய வானம் வசப்படும் புதினம் உலகப்புகழ் வாய்ந்தது.
இந்நூலுக்காக அவர் 1995ம் வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்றார். தனது நூல்களுக்காக தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற ஐயா பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.
அவர் எழுதிய மானுடம் வெல்லும், மகாநதி சந்தியா, ஆண்களும் பெண்களும் போன்ற பல புதினங்களும், நேற்றைய மனிதர்கள், விட்டு விடுதலையாகி போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் தமிழ் எழுத்துலகிற்கு கிடைத்த மாபெரும் பரிசுகளாகவே நான் கருதுகிறேன்.
பிரபஞ்சன் மறைவால் துயறுற்று இருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் எழுத்து உலகிற்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியையும் என் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன். மறைந்த தமிழ் எழுத்துலக மாமேதை பிரபஞ்சன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications