சென்னையின் கடைசி நம்பிக்கை.. டிசம்பர் மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: அடுத்த கோடையிலிருந்து சென்னை தப்பிக்க டிசம்பர்தான் கடைசி நம்பிக்கை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னைக்கு அவ்வ்ப்போது மழையை தந்தது.

சென்னையில் மழை
இதையடுத்து கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அதிக மழையை பெற்றன. அப்பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதாக கூறப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலையால் சென்னையில் மழை பெய்தது.
மழை
எனினும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் நிரம்பவில்லை.இதுகிறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இதற்கு காரணம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பெய்த மழையே காரணமாகும்.

நிரம்பவில்லை
ஒரு பகுதி மட்டுமே பாதிப்புக்குள்ளானது என்றால் அது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்தான். செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகளில் இன்னும் நீர் நிரம்பவில்லை.

மழையை கேட்க வேண்டியிருக்கும்
அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நல்ல நிலையை எட்டியுள்ளது. அதுபோல் ரெட்டேரியும் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் உள்ளது. டிசம்பர் மாதம்தான் நமது கடைசி நம்பிக்கையாகும். ஆனால் அந்த டிசம்பரில் நாம் அதிக மழையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications