For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன்: களமிறங்கும் வன அதிகாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

சத்யமங்கலம் காட்டில் பதுங்கியுள்ள வீரப்பனைப் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள, கூட்டுஅதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவி செய்வதற்காக 50 வன அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வன மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், வன அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்புப் படைமற்றும் கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு சத்யமங்கலம் காடு, வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் ஆகியவைகுறித்து வழி காட்டுவார்கள்.

இந்த வன அதிகாரிகளுக்கு சிறப்பு அனைத்து சலுகைகளும் அளிக்கப்படும். உயிரைப் பணயம் வைத்துசெயல்படும் இவர்களுக்கு சலுகைகள் பல அளிக்கப்படும்.

முதலில் பிஎஸ்எப் மற்றும் எஸ்டிஎஃப் படையினர் 55 வன அதிகாரிகளைக் கேட்டனர். நாங்கள் 70 பேரைஅனுப்பினோம். அவர்கள் 50 பேரைத் தேர்வு செய்துள்ளனர் என்றார் துரைமுருகன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X